Saturday, August 27, 2011

தேசிய அறிவியல் ஆசிரியர்கள் மாநாடு 2011


 தேசிய அறிவியல் ஆசிரியர்கள் மாநாடு, தேசிய அறிவியல் தொழில்நுட்ப மையம் (NCSTC)> அறிவியல் தொழில் நுட்பத்துறை(DST)  புதுடெல்லி,மற்றும் தேசிய அறிவியல் தொழில் நுட்பமைய கூட்டுக்குழு( NCSTC-NETWORKபுதுடெல்லி ஆகிய அமைப்புகள் இனைந்து கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இப்மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

 இம்மாநாடு நாட்டில் உள்ள அறிவியல் ஆசிரியர்களுக்கு இடையே அடிப்படையான தொடர்பை ஏற்படுத்தவும், அவர்களுக்கு இடையே அறிவியல் விழிப்புணர்வையும், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்தற்காக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இம்மாநாட்டின் மூலம் ஆசிரியகள் சமூகத்தினர்களிடையே புதிய கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும்,அறிவியல் கல்வியில் உருவாகி உள்ள ஆக்கபூர்வமான புதிய முறைகளை பரிமாறிக்கொள்ளவும், அடிப்படையாக அமைவதோடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவாகி உள்ள அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை மற்றவர்கள் பகிர்ந்துக்கொள்வதற்கான வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தி வருகிறது.



இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படும் இம்மாநாடு இந்த ஆண்டு “அறிவியல் கல்வியின் சாவல்கள் மற்றும் வளர்ச்சி”(Trends & Chanllengs in Science Education)  என்ற கருப்பொருட்ளை மையமாகக் கொண்டும்இ துணைத் தலைப்புகளாக 1. “அறிவியல் கற்றல் -கற்பித்திதலில் புதுமைகள்” 2. “அறிவியல் பாடங்களை தொடர்புப்படுத்துதல்” 3. “வேதி அறிவியல் மற்றும் வாழ்க்கைத்தரம்” ஆகிய தலைப்புகளில் நடத்தப் படுகிறது. இம்மாநட்டில் ஆசிரியர்கள்இ கல்வியாளர்கள், ஆராய்ச் சியாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், பி.எட் கல்லுரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியரிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கலாம்.



 மேற்கண்ட முன்று தலைப்புகலை அடிப்படையாக கொண்டு ஆங்கிலம் அல்லது இந்தியில் ஆய்வுகட்டுரைகள், சுவரொட்டிகள் தயாரித்து வரும்  அக்டோபர் 15 2011 க்குள் பேரா.P.ளு வர்மா, தேசிய ஒருங்கிணைப்பாளர், தேசிய அறிவியல் ஆசிரியர்கள் மாநாடு, அறிவியல் கல்லலூரி, பட்னா,பீகார்-800005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு: http://www.ncstc-network.org/ntsc6/index.php மற்றும் புதுவை அறிவியல் இயக்கத்தை அனுவகவும். தொடர்பு எண்கள்: 04132290733, 9488074341, 944322588.


Friday, August 5, 2011

புதுவை "கல்விக் கருத்தரங்கம்"




புதுவை அறிவியல் இயக்கம் சார்பாக 06.08.2011 சனிக்கிழமை கல்விக் கருத்தரங்கமும் புதுவை அறிவியல் இயக்கத்தின் பொதுக்குழுவும் நடைபெற உள்ளது.

காலை 10.00 மணிக்கு புதுவை செயின்ட் பேட்ரிக் மேனிலைப் பள்ளி வளாகத்தில் அறிவியல் இயக்கத்தின் தலைவரும், ஜிப்மர் குழந்தைகள் நல தலைமை மருத்துவருமான திரு.S.சினிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெறும் கருத்தரங்க துவக்க விழாவிற்கு மாண்புமிகு கல்வி அமைச்சார் P.M.L கல்யாணசுந்தரம் அவார்கள் கருத்தரங்கை துவக்கி வைத்து சிறப்புரையாற்றவும் உள்ளார்.

தலைசிறந்த கல்வியாளரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் வே.வசந்திதேவி அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்.

சமச்சீர் கல்விகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர்களில் ஒருவரும் கல்வியாளருமான N. மாதவன் அவர்களும், “புதுவையின் உயர்கல்விகுறித்து புதுவை பல்கலைக் கழகத்தின் சர்தேச கல்வி மற்றும் அரசியல் துறை பேராசிரியர் டாக்டர். லாசரஸ் சாம்ராஜ் அவர்களும்,  “கற்பித்தல் முறையும் ஆசிரியர் கல்வியும்குறித்து புதுவை அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் டாக்டர்.தா.பரசுராமன் அவர்களும்,  “கல்வித்தரம்குறித்து புதுவை அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் ஹேமாவதி அவர்களும், “இலவசக் கட்டாயக் கல்விகுறித்து புதுவை அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் தட்சணாமூர்த்தி அவர்களும், உரை நிகழ்த்த உள்ளனர். அறிவியல் இயக்க செயலர்  ரவிச்சந்திரன் கருத்தரங்க வரவேற்புரையாற்றவும், அறிவியல் இயக்க பொதுச்செயலார் s.சேகர், நோக்கவுரையாற்றவும், செயலர் ஆர்.மாரிமுத்து நன்றியுரை நிகழ்த்தவும் உள்ளனர்.

 பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு காரைக்கால் மாவட்டத் தலைவர் பேராசிரியார் கே.சம்பந்தம் தலைமை ஏற்கவும், செயல் அறிக்கையை இயக்க பொதுச்செயலாளர் S.சேகர் அவர்கள் முன்வைக்கவும், பொருளாளர் R.ரமேஷ் நிதிநிலை அறிக்கை வைக்கவும் உள்ளார். செயலாளர் மா.சுதார்சன் நன்றியுரையுடன் முடியும் பொதுக்குழுவில் அறிவியல் இயக்கத்தின் எதிர்கால வேலைகளும் திட்டமிடப்பட உள்ளது. புதுவையின் கல்வி நிலைகுறித்து, கல்விவளர்ச்சி குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.