Saturday, December 24, 2011

சர்வதேச அளவில் நடக்கும் அறிவியல் உருவாக்குவோம் திட்டத்திற்கு ஆய்வு அறிக்கைகள் வரவேற்பு


புதுவை அறிவியல் இயக்கம்பிரான்ஸ் நாட்டு பிரான்ஸ் பல்கலைக்கழகம் தெற்கு 11 உடன்  (University of Paris, South 11, France) இணைந்து சர்வதேச அளவில் அறிவியல் உருவாக்குவோம் (Make ScienceCompetition) திட்டத்தை / போட்டியை இந்தியாவில் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக புதுச்சேரிஅரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் பங்குபெறும் வகையில் புதுவை அறிவியல் இயக்கம், புதுச்சேரிஅரசு பள்ளிக் கல்வித்துறையின் மாநில பயிற்சி மையத்துடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திவருகிறது.

2012 ஆம் ஆண்டிற்கான அறிவியல் உருவாக்குவோம் போட்டிக்கான ஆய்வறிக்கைகள் வரவேற்கப்படுகின்றன. விதிமுறைகள்:

1.     இப்போட்டியில் புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளிகள் மட்டுமே பங்கேற்க முடியும்.

2.     இத்திட்டம் ஜனவரி 2012 முதல் ஏப்ரல் 2012 வரை நடைபெறும்.

3.      7வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டுமே பங்குபெறலாம்.

4.     ஆய்வுத்திட்டம் இயற்பியல், வேதியல், கணிதம், அடிப்படை உயிரியியல் ஆகிய பிhpவுகளில் இருக்கலாம்.

5.     ஆங்கிலத்தில் மட்டுமே திட்ட குறிப்புகளை ஆனுப்ப வேண்டும்.
  
6.      கடைசித்தேதி வரும் 2011 டிசம்பர் 28க்குள்  அனுப்ப வேண்டும்.

7.      மேலும் விவரங்களுக்கும் திட்டத்திற்காக விண்னப்படிவத்திற்கும் கிழ்ண்ட மின்அஞ்சல் முகவயிலும் தொலைப் பேசியிலும் தொடர்பு கொள்ளலாம்: மின்அஞ்சல் : cerdpsf@gmail.com  Ph:  0413 -2290733

ஆய்வு அறிக்கைகள் மின் அஞ்சல் மூலம் பெறப்பட்டு அவை பிரான்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கபட்டும் அவற்றில் சிறந்த 12 ஆய்வுத்திட்டங்களை மட்டும் தேர்வு செய்து அனுப்புவார்கள். அந்த திட்டங்கள் துவக்கத்திற்கான உதவி ஊக்கதொகை வழங்கபடும். பிறகு அந்த திட்டம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு அவை மீண்டும் பிரான்ஸ் பல்கலைக்கழத்திற்கு அனுப்பட்டு வீடியோ கான்பிரன்சிங் மூலம் சிறந்த 4 ஆய்வு குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிக்கு  சான்றிதழும் முதல் பரிசுக்கு 300  Euro முன்று இரண்டாம் பரிசுக்கு தலா 100 Euro அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை அனைத்து அரசுப் பள்ளிகளுகம் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Friday, December 23, 2011

விண்வெளிக்கு வீரர்களை கொண்டு செல்லலும் புதிய விண்கலம் ஸ்பேஸ்எக்ஸ்


விண்வெளி அமைப்பான நாஸா தனது ஷட்டில் ரக விண்கலங்கள் உபயோகிப்பதை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில், ஸ்பேஸ்எக்ஸ்ரக விண்கலங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரஉள்ளது.

ஏறக்குறைய 30 ஆண்டுகள் 135 முறை ஏவப்பட்ட ஸ்பெஸ் ஷட்டில்ரக விண்கலங்கள் ஏராளமான விண்வெளி வீரர்களை விண்ணுக்கு கொண்டு சென்றது. தற்போது இதற்கு பதில் மிக நவீனரக ஷட்டில்களை நாஸா உருவாக்கி வருகிறது. அதுவரை வீரர்களை விண்ணுக்கு அழைத்துச் செல்லவும் பூமிக்கு திரும்பச் செலுத்தவும் ரஷ்யாவின் சோயூஸ் கேப்சூல்களையே அமெரிக்கா சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் அமெரிக்காவில் பல விண்துறை நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள டிராகன் ரக கேப்சூலுக்கு நாஸா அனுமதி தந்துள்ளது. இந்த கேப்சூல் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். இதில் பயணிக்கும் விஞ்ஞானிகள் வானில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்று, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு விட்டு, இந்த கேப்சூலிலேயே பூமிக்குத் திரும்புவர்.ஷட்டில் ரக விண்கலம் விமானத்தைப் போல பூமியில் தரையிறங்கும்.ஆனால் இந்த கேப்சூல் பாராசூட் மூலம் பூமியில் தரையிறங்கும்.
ரஷ்யா தான் ஆரம்பம் முதலே கேப்சூல்களை பயன்படுத்தி வந்தது. தற்போது அமெரிக்கா கேப்சூலை பயன்படுத்தவுள்ளது. அமெரிக்கா 2012 பிப்ரவரி மாதம் 7ம் தேதி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் என்றும் இதில் வீரர்கள் செல்ல மாட்டார்கள்என்பதும், சரக்குகள் ஏற்றிச்செல்லும் இந்த கேப்சூல், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அதை கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்குள்ள விஞ்ஞானிகள் சரக்குகளை இறக்கிய பின், இந்த கேப்சூல் பூமிக்கு திரும்பும். பசிபிக் கடலில் பாராசூட் முலம் இந்தக் கலம் தரையிறங்கும்இந்த விண்கலத்தை உருவாக்கியுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் பே பால் நிறுவனரான எலோன் முஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, December 22, 2011

விவசாய நிலப்பரப்பு வீழ்ச்சி எதிர்கால இந்தியாவின் வீழ்ச்சி
























5 ஆண்டுகளில் 8 லட்சம் ஹெக்டேர் நிலம் குறைந் துள்ளது. வேளாண் சாராத இதரப் பணிகளுக்கு அவை பயன்படுத்தப்பட்டதால் விளைநிலம் குறைந்துள் ளது என நாடாளுமன்றத் தில் செவ்வாய்க்கிழமை யன்று தெரிவிக்கப்பட்டது.

2003-04ம் ஆண்டு 1 லட்சத்து 83 ஆயிரத்து 186 ஹெக்டேர் நிலம் குறைந்துள்ளது. 

2008-09 ம் ஆண்டில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 385ஹெக்டேர் நிலம் குறைந்துள்ளது 

என மக்களவையில் வேளாண் துறை இணையமைச்சர் ஹரிஷ் ரவாத் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.

இந்த விளைநிலங்கள்- கட்டிடங்கள், சாலைகள், ரயில்வே பணிகளுக்கு பயன் படுத்தப்பட்டுள்ளன. 

இருப்பினும் உணவு தானிய உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது என்றும், விளைநிலம் சிறிய அளவு குறைந்துள்ளதால்,எந்த எதிர்மறை விளைவையும் வேளாண் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. 


விவசாய நிலங்களின் மீது நடக்கும் அநியாய ஆக்கிரமீப்பை எப்படியாது தொடர வேண்டும் என்ற லாபவெறி அப்பட்டமாக தெரிகிறது. 

எதிர்கால சமூகத்தின் மீக துயரமான வாழ்வுக்கு நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

Wednesday, December 14, 2011

மாற்றங்களை உருவாக்கும் லஞ்ச ஒழிப்புக் கூட்டங்கள்


புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகின்றன.

÷புதுச்சேரியில் கடந்த 4 ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்களில் பல்வேறு பிரச்னைகள் கிளப்பப்படுகின்றன. இதனால் நிர்வாக ரீதியாகவும், அதிகாரிகளின் செயல்பாடுகள் அளவிலும், தன்னார்வலர்களின் போக்குகளிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

÷லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் ஏற்கெனவே சம்பிராயத்துக்காக தலைமைச் செயலகத்தில் யாருக்கும் தெரியாமல் நடத்தப்பட்ட காலம் உண்டு. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக இந்தக் கூட்டம் நடத்துவதிலேயே பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு எந்தத்துறை லஞ்ச ஒழிப்புக் கூட்டத்தை நடத்துகிறதோ அந்தத்துறையின் அரசு செயலர் வர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு சில இடங்களில் போராட்டமும் நடந்து அந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

÷புதுச்சேரியில் தாவரவியல் பூங்கா இருக்கிறது. பணியாளர்கள் இருக்கிறார்கள். அப்படியிருக்க துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு பூங்கொத்து வாங்கிக் கொடுக்க வேளாண்துறை ரூ.13 லட்சம் செலவிட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்திருக்கிறது என்று லஞ்ச ஒழிப்பு கூட்டத்தில் சுட்டிக் காட்டினார்கள். இதையடுத்து இனிமேல் பைசா செலவு இல்லாமல் வேளாண்துறை சார்பில் பூங்கொத்து தயார் செய்து கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

÷தனியார் நிறுவனம் குப்பை வாருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட நகராட்சி ஊழியர்கள் வேலை எதுவும் செய்யாமல் சம்பளம் பெறுகின்றனர் என்று சுட்டிக் காட்டியப் பிறகு அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புக் கூட்டத்தில் உறுதி அளித்தனர். ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் ஊழியர் அல்லது அதிகாரி பணியாற்றுவது லஞ்சத்துக்கு ஒரு வகையில் காரணமாக இருக்கிறது. அவர்களை வேறு இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இப்படி நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை லஞ்ச ஒழிப்புக் கூட்டம் கொண்டு வந்துள்ளது.

÷லஞ்ச ஒழிப்புக் கூட்டங்களில் உயர் அதிகாரிகள் வருவதால் கீழ்நிலையில் பணியாற்றும் அதிகாரிகளும் பங்கேற்றனர். இதனால் பணிகளில் தேக்கம், கடமையைச் சரியாகச் செய்யாதவர்கள், விதிமுறைகளை மீறி தனியாருக்குச் சாதகமாக நடந்து கொண்டோர், விவசாயிகளுக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுவோர் என்று இக் கூட்டங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டனர். மேலும் ஒரு சில கூட்டங்களில் ஒரு சில அதிகாரிகளின் சொந்த விஷயங்கள் கூட இக் கூட்டங்களில் விமர்சனம் செய்யப்பட்டன. இதனால் அதிகாரிகளிடம் ஒருவிதமான பயம் ஏற்பட்டிருக்கிறது.

÷பொதுமக்கள் எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருக்கிறார்கள் என்பதை கீழ் பணியாற்றும் அதிகாரிகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எல்லா அதிகாரிகளையும் இந்தக் கூட்டத்துக்கு வரவழைத்தேன் என்று ஓர் உயர் அதிகாரி கூறியிருந்தார். லஞ்ச ஒழிப்புக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தவிர்த்த பெரும்பாலான அதிகாரிகள் நீதிமன்ற வழக்குக்குச் செல்ல வேண்டியிருக்கிறது என்று காரணம் கூறி தப்பிக்கப் பார்த்தனர்.     

இக் கூட்டங்களில் பங்கேற்று லஞ்சம் தொடர்பாகவும் முறைகேடுகள் தொடர்பாகவும் பேசிய பலரும் ஆவணங்களுடன்  வந்திருந்தனர். அதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர்கள் பெற்றிருந்த விவரங்கள்தான் காரணம். அதிகாரிகளுக்கே தெரியாத பல்வேறு விஷயங்களை அவர்கள் கைவசம் வைத்திருந்தனர்.

÷குடிநீர் பிரச்னை, தெருவிளக்குச் சரியாக எரிவதில்லை உள்ளிட்ட பொது பிரச்னைகளில் கவனம் செலுத்தவும் இந்தக் கூட்டம் வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

பொதுவாக அரசு ஊழியர்கள் என்பவர்கள் பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டியவர்கள். மக்களின் வரிப்பணத்தில்தான் அவர்கள் சம்பளம் பெறுகின்றனர் என்று இந்த லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்களில் தன்னார்வலர்கள் பலரும் ஆவேசத்துடன் நடந்து கொண்டனர். ஒரு சில நேரங்களில் வரம்பை மீறும் வகையிலும் அவை இருந்தன. நிதான போக்கு இவர்களிடம் காணப்படவில்லை. இதைக் கட்டுப்படுத்தும் வகையிலும்,
பங்கேற்கும் எல்லோருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலான முறையும் பொதுவாகக் கடைப்பிடிக்காமல் போனதுதான் இதற்குக் காரணம்.

÷மாதந்தோறும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தினால் பல்வேறு பிரச்னைகள் தீர்க்க வழி ஏற்படும். இதற்குக் கூட்டம் போட்டு பேசுவதைக் காட்டிலும் உயர் அதிகாரிகள் உட்கார்ந்து பிரச்னைகளை மட்டும் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். லஞ்ச ஒழிப்புக் கூட்டம் ஒரு சில மாற்றத்தை உருவாக்கியுள்ளது உண்மை. இக் கூட்டத்தை நடத்தினால் மட்டும் லஞ்சம் ஒழிந்துவிடாது.


 நடைமுறையில் லஞ்சம் கொடுக்காமல், வாங்காமல் இருப்பதற்கான நிர்வாக முறைகளில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் லஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து ஒழிக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Tuesday, November 29, 2011

கல்வி குற்றத்தில் சிறந்த தமிழ்நாடு!


சாலை விபத்து, தற்கொலைகள், கள்ள நோட்டுப் புழக்கம், மாணவர்கள் தற்கொலை, போலி பாஸ்போர்ட், முதியோர்கள் பாதுகாப்பு எனப் பல குற்றங்களில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு.

அடுத்த வரியைப் படித்து அதிர்ச்சி அடைய வேண்டாம். சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் பல குற்றங்களில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. சாலை விபத்து, தற்கொலைகள், கள்ள நோட்டுப் புழக்கம், மாணவர்கள் தற்கொலை, போலி பாஸ்போர்ட், முதியோர்கள் பாதுகாப்பு என்று பல வகையான குற்றங்களில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறோம் நாம். தேசியக் குற்றப் பதிவுத்துறை (‡National Crime Records Bureau - NCRB) சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் இந்தத் தகவல்களைத்  தெரிவிக்கின்றன.

சாலை, ரயில் விபத்துகள்

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பது தமிழகம். 15 ஆயிரத்து 409 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்த இடம் ஆந்திராவிற்கு (15,337 பேர்), அடுத்து உத்தரப்பிரதேசத்திற்கும் மகாராஷ்டிராவிற்கும்.

நாடு முழுக்க கடந்த 2010ம் ஆண்டு 1.61 லட்சம் விபத்துகள் பதிவாகியுள்ளன. அதாவது, நாட்டில் ஒவ்வொரு நாளும் சாலையில், ரயில் பாதையில் 18 பேர் இறக்கிறார்கள். சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் (1.61 லட்சம் விபத்துகளில் 1.34 லட்சம் விபத்துகள் சாலை விபத்துகள்). இதுவரை இந்தியாவிலேயே இல்லாத அளவிற்குக் கடந்த ஆண்டு விபத்துகள் நடந்துள்ளன.

இதற்குப் பெருகி வரும் வாகனங்கள் ஒரு காரணமாக கூறப்படுகிறது. 2008ம் ஆண்டில் இருந்ததைவிட 28 சதவீதம் வாகனப் பதிவு அதிகரித்துள்ளது. 20 சதவீதச் சாலை விபத்துகள் இரு சக்கர வாகனங்களாலும் 28 ஆயிரத்து 800 விபத்துகள் கனரக வாகனங்கள், டிரக்குகளாலும் நடந்துள்ளன.

தற்கொலைகள்
வேலையின்மை, வறுமை, கடன் தொல்லை, வரதட்சணைக்கொடுமை போன்றவற்றால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 21 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். 2010ம் ஆண்டு இந்தியாவில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதிலும் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. அந்த ஆண்டு தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் 16,561 பேர். நாட்டில் நடந்த தற்கொலைகளில் 57.2 சதவீதம் தமிழகம், மேற்கு வங்காளம் (16,037), மகாராஷ்டிரா (15,916), ஆந்திரா (15,901), கர்நாடகா (12,651) ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்துள்ளன. இதில் திகைக்க வைக்கும் விஷயம் என்னவென்றால், தற்கொலை செய்துகொள்பவர்களில் 65.8 சதவீதம் பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்!

முதியோர் பாதுகாப்பு


தமிழகத்தில் முதியோர்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்களா? இல்லை என்றுதான் உதட்டைப் பிதுக்கத் தோன்றுகிறது. ஆனால், இதில் ஒரு சின்ன ஆறுதல். ஆந்திராவையும் உத்தரப்பிரதேசத்தையும் அடுத்து, முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லாத மூன்றாவது மாநிலமாகத்தான் இருக்கிறது தமிழகம்.

ஆனால், அதிர வைக்கும் விஷயம் என்னவென்றால் வயதான பெண்களின் பாதுகாப்பு நிலை கவலைக்குரிய வகையில் மோசமடைந்திருக்கிறது. 50 வயதிற்கு மேற்பட்ட 227 பெண்கள் 2010ம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டு 93 பெண்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர். 2010ம் ஆண்டு 50 வயதைத் தாண்டிய 100 ஆண்களும் 2009ம் ஆண்டு 246 ஆண்களும் கொலையுண்டிருந்தனர்.

‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின் தொலைபேசி எண்ணுக்கு (1253) தினமும் 10க்கும் அதிகமான அழைப்புகள் உதவி கேட்டு வருவதாகவும் அதில் இரண்டு முதியவர்கள் தங்களுக்கு பாதுகாப்புக் கேட்பதாகவும் கூறுகிறார்கள். பெரும்பாலும் வயதானவர்கள் தனியாகவே வாழ்கிறார்கள். பணம், நகை என்று கொள்ளையடிப்பவர்களின் இலக்கு இவர்கள் மேலேயே இருக்கிறது. காவல்துறையின் தகவல்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 54 முதியவர்கள் மாநிலத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும 10 படுகொலைகள் நடந்துள்ளன.

போலி பாஸ்போர்ட்

போலி பாஸ்போர்ட், விசாவுடன் பறப்பதற்கான வசதியான இடமாகவே தமிழக விமான நிலையங்கள் இருப்பதாக தேசியக் குற்றப் பதிவுத்துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நாடு முழுவதும் பதிவான இதுபோன்ற 937 வழக்குகளில் 398 பேர் தமிழகத்தில் பிடிபட்டுள்ளனர். தொடர்ந்து கேரளாவில் 209 பேரும் மேற்கு வங்களத்தில் 102, மகாராஷ்டிரா 69, ஆந்திரா 68 வழக்குகள் பதிவாகி உள்ளன. மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் ஒரு வழக்குகூட இல்லை அல்லது 50க்கும் குறைவான வழக்குகளே பதிவாகியுள்ளன. இந்தியாவிலேயே பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரம் கோவை. தொடர்ந்து திருச்சி, திருவனந்தபுரம் உள்ளது. இதனாலேயேசென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தமிழகத்திலிருந்து தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள் என்று சுமார் 40 இடங்களுக்கு நேரடி விமான சேவை இருப்பது, அதிகப் பயணிகள் போன்ற காரணங்கள் போலி பாஸ்போர்ட்டுக்கு கூறப்படுகிறது. சென்னையில்தான் அதிக அளவில் ஏஜெண்ட்கள் இருக்கிறார்கள். மொத்தம் உள்ள 243 பேரில் 197 பதிவு பெற்ற ஏஜெண்ட்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கில் போலி ஏஜெண்ட்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் ஐ.நா. அமைப்பின் போதைக் குற்றத்தடுப்புப் பிரிவு வெளியிட்ட ஆவில், போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக இலங்கைத் தமிழர்கள் 23 சதவீதம் பேர் சென்னை சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறது.

மாணவர்கள் தற்கொலை

கடந்த 4 ஆண்டுகளில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது 26 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னை, மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில்தான் பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதிலும் சென்னைதான் முன்னிலை. சென்னையில் 170 மாணவர்கள், தில்லியில் 133, மும்பையில் 115 மாணவர்களும் 2010ல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

2009ல் வெறும் 0.9 சதவீதமாக இருந்த முதுநிலை பட்டதாரி மாணவர்களின் தற்கொலை சதவீதம் அடுத்த ஆண்டு 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதல் ரேங்க் வாங்க வேண்டும், போட்டி மனப்பான்மை, அளவுக்கு அதிகமான கல்விச் சுமை இவையே இதற்குக் காரணம் என உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

கள்ளநோட்டு

2010ல் சென்னையில் மட்டும் 72 கள்ள நோட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டு வெறும் 42 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. கள்ள நோட்டுகள் அதிகமாகப் புழங்கும் இடம் மும்பை. கிட்டத்தட்ட இந்த விஷயத்தில் மும்பையை (76) நெருங்கிவிட்டோம் நாம். சென்னையை அடுத்து வேலூரிலும் மதுரையிலும் தலா 31 கள்ள நோட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கடுத்த நகரம் கோயம்புத்தூர் (30). பொதுவாகத் தமிழகத்தில் பெருநகரங்களில்தான் கள்ள நோட்டு அதிகம் புழங்குவதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

132 சேக் போஸ்ட்களில் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்து, கள்ள நோட்டு கடத்துபவர்களைப் பிடித்தாலும் இதன் பின்னணியிலிருந்து செயல்படுபவர்கள் யார் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருப்பதாகப் போலீஸ் கூறுகிறது. மும்பை, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் இருந்துதான் இவர்கள் செயல்படுகிறார்கள். மாவட்டங்களில் இருக்கும் வேலையில்லாத இளைஞர்களை கள்ள நோட்டைப் புழங்க விடுவதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் காவல்துறையின் அனுமானம்.

அடையாளம் தெரியாத உடல்கள்

மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஏழு அடையாளம் தெரியாத உடல்கள் வருவதாகப் புள்ளி விவரம் கூறுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரத்து 795 உடல்கள் வந்திருக்கின்றன. தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் இது அதிகம். 2006லிருந்து ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக இந்த எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது.

போலீஸ் ரெக்கார்டுப்படி 2,739 அடையாளம் தெரியாத உடல்களில் 657 உடல்கள் சென்னை, செங்கல்பட்டு, சூளூர்பேட்டை ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டைவிட 248 உடல்கள் அதிகம் கிடைத்துள்ளன. அடையாளம் காண முடியாத உடல்கள் 48 மணி நேரத்தில் மாநகராட்சி உதவியுடன் தகனம் செயப்படுகின்றன அல்லது மருத்துவக் கல்லூரிக்கு தரப்படுகின்றன.
நன்றி கீதா புதியதலைமுறை 

Thursday, November 17, 2011

கல்விச் சிந்தனைகள்




” அறிவு நமக்கு ஆற்றலை அளிக்கிறது
அன்பு நம்மை முழுமையடையச் செய்கிறது”

 டாக்டர். ராதாகிருஷ்ணன் முன்னாள் குடியரசு தலைவர்

நமது இந்தியாவில் 504 பல்கலைக் கழகங்கள் உள்ளன. மொத்தக் கல்லூரிகள் 25,951. இதில் மகளீர் கல்லூரிகள் 2565. இக் கல்லூரிகளில் படிக்கம் மாணவர்களின் எண்ணிக்கை 1.36 கோடி. இதில் பெண்கள் 56.49 லட்சம். 

” கல்வி என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்த கருவி
 உலகை மாற்றுவதற்கு அதைப் பயன்படுத்த முடியும்”
                                            
-நெல்சன் மண்டேலா

” அடிப்படை அறிவை வளர்க்கின்ற கல்வியைப் புகட்ட நினைக்காமல், பட்டதாரிகளை உற்பத்தி செய்வது பல்கலைக் கழகங்களின் நோக்கமாக இருக்கக்கூடாது.
                                     
  - ஜவஹர்லால் நேரு.

” அனைத்து குழந்தைகளும் ஓவியர்களே, பிரச்சனை என்னவென்றால்
 வளர்ந்த பிறகும் எப்படி ஓவியராகவே இருப்பது என்பதுதான்”
                                                                  
- பிக்காஸோ

” ஒரு மாணவனுக்கு உண்மையான பாடப்புத்தகம் அவனுடைய ஆசிரியர்தான்”  

 - மஹாத்மா காந்தி

” வீட்டுக்கொரு புத்தகசாலை வேண்டும். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருட்களுக்கும், போக போக்கியப் பொருட்களுக்கும் தரப்படும் நிலை மாறி, புத்தகச் சாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை அடிப்படை தேவை. அந்த தேவையை பூர்த்தி செய்ததானதும் முதல் இடம் புத்தகச் சாலைக்கே தரப்படவேண்டும்.

 - அண்ணாத்துரை

“நான் நிலவு வரை செல்வதற்கு உதவியது தாய்மொழி தமிழ்தான்.” 



-    மயில்சாமி அண்ணாத்துரை

” இயல்பிலேயே எதையும் கற்கும் ஆற்றல் குழந்தைகளிடம் உண்டு, மாணவர்களுக்கு எந்த ஆசிரியரும் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் கற்றுகொள்கிற வாய்ப்பை மகிழ்ச்சிக்குரியதாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் ஏற்படுத்தித் தருவது மட்டும்தான்.”                   

 - ஜே. ஷாஜஹான்

கல்வியில் தோல்விக்கு இடமில்லை, அனுமதியில்லை என்ற நிலை கொணருவது பெரும் புரட்சிதான்.    

  - டாக்டர். ஆர். ராமானுஜம்

” மாற்றம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பழைய நிலைமைகளை நியாயப்படுத்தினால் எந்த மாற்றமும் கல்வியில் வரமுடியாது”
          
  - எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க

”கூட்டாக சேர்ந்து கற்பது சிறந்த அரசியல். தனியாகக் கற்பது சுயநலம் என்று புரிந்துகொண்டோம்.”                     

 - பார்பியானா மாணவர்கள்  

” அவர் பிரதமாராக இருக்கும்போது லிப்டில் வந்தார். திடீரென்று லிப்ட் பழுதாகிவிட்டது. 20 நிமிடங்கள் போராடி லிப்டைத் திறந்தனர். வெளியே வந்த அவர் அதிகாரிகளை அழைத்தார். ஓர் ஆலோசனை சொன்னார். ”லிப்டில் சிறியதாய் ஒரு நூலகம் அமைக்கலாம்” என்றார்”   

 - ஜவஹர்லால் நேரு

மொபா. மதுரை

Saturday, November 12, 2011

குழந்தைகள் அறிவியல் திருவிழா



காரைக்காலில் 5 நாள் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் திருவிழா நடைபெற்றது காரைக்காலில் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை மற்றும் புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் 5 நாட்கள் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் திருவிழா கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் துவங்கியது.

அறிவியல், மொழி, கலை, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளரும் தலைமுறையினர் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு துவங்கப்பட்ட இந்த குழந்தைகள் அறிவியல் திருவிழா கடந்த ஆண்டு ஏனாம் பகுதியில் நடைபெற்றது. 2வது ஆண்டாக காரைக்காலில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் புதுச்சேரி, மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த அறிவியல் திறன் பெற்ற   50 மாணவர்களும், காரைக்காலில் அறிவியலில் சிறந்து விளங்கும் 50 மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மூன்று பிராந்தியங்களில் உள்ள கலாசாரம், பழக்கவழக்கம், அறிவியல் முறைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் 6 பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சிகள் நடந்தன. அறிவியலின் செயல்பாடு, எண்கள், கற்பனை வளமும் காகித கலையும் அதிசயங்களை விவரித்தல், இயற்கை படிப்பு, அறிவியல் பொம்மை தயாரித்தால் ஆகிய தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடந்தன.
தினந்தோறும் மாலை நேரத்தில் 3 பிராந்திய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

Saturday, October 15, 2011

அறிவியல் விழிப்புணர்வு திறனறி போட்டி



மாணவர்களிடையே அறிவியல் ஆக்கத் திறனை வளர்க்கும் வகையில், புதுச்சேரி அறிவியல் இயக்கம் தமிழ்நாடு அறிவியல்இயக்கத்துடன் இணைந்து, அறிவியல் விழிப்புணர்வு திறனறி போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.


போட்டியில், 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம்.

6 முதல் 8ம் வகுப்பு வரை, 9 முதல் 12ம் வகுப்பு வரை என, இரு பிரிவுகளில் போட்டி நடக்கும். 

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும் 30ம் தேதிக்குள் ரூ.100 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவுசெய்யும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓராண்டு காலத்திற்கு ரூ.84 மதிப்புள்ள துளிர் அறிவியல் மாத இதழ்கள் மாதந்தோறும் அனுப்பிவைக்கப்படும்.

 ஜந்தர் மந்தர் (ஆங்கிலம்) இதழ் வேண்டுவோர் பதிவுக்கட்டணமாக ரூ.150/-(ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்)செலுத்தவேண்டும். 

போட்டிக்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் 26ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் நடக்கும்.

எழுத்துத் தேர்வில் 120 நிமிடத்தில் 100 வினாக்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் வினாத்தாள் அமையும்.

வினாத் தாள் தமிழ், ஆங்கிலத்தில் அமையும்.

தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். 

புதுச்சேரி அளவில் முதலிடம் பெறும் 5 மாணவர்களுக்கு (இளநிலை) அடுத்த ஆண்டு மாகியில் நடக்கவுள்ள மாநில குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். 

புதுச்சேரி அளவில் முதல் 50 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு புதுச்சேரி அறிவியல் இயக்க மாத இதழான அறிவியல் முரசு ஒரு ஆண்டுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும். 

இப்போட்டிக்கான ஒருங்கிணைப்பாளர்கள்,பள்ளி முதல்வர்கள்/தலைமையாசிரியர்கள் பூர்த்தி செய்த படிவத்துடன் நுழைவுக்கட்டணத்தை வங்கி வரைவாக அல்லது பணவிடையாக மாநில ஒருங்கிணைப்பாளரின் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.


வங்கி வரைவு துளிர்,சென்னை என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுக்கவேண்டும். (DD in favour of Thulir, Payable at Chennai) 


இப்போட்டிக்கான முதல் பதிவுப்பட்டியல் 28.10.2011க்கு முன்னரும் உரிய வங்கிவரைவு மற்றும் பங்கேற்பாளர் பட்டியல்-முழு முகவரியுடன் மாநில ஒருங்கிணைப்பாளரின் தஞ்சாவூர் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். ஐம்பது பதிவுகளுக்கு மேல் உள்ள பள்ளிகள் தேர்வுமையமாகச் செயல்படலாம்.


 பள்ளிகளுக்கான பரிசுகள்

100 மாணவர்களுக்கு மேல் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று அறிவியல்  மென்தட்டுகள்(சி.டி.) 


200 பதிவுகளுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு.. முதல் பரிசு -ரூ.5000 மதிப்புள்ள அறிவியல் நூலகம். 


இரண்டாம் பரிசு -ரூ.3000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்
மூன்றாம் பரிசு -ரூ.2,000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்


பள்ளிகளுக்கான பரிசுகள் உயர் அளவு பதிவுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.


இதற்கு துளிர் மற்றும் ஜந்தர்மந்தர் பதிவுகள் சேர்த்துக் கணக்கில் கொள்ளப்படும். இப்போட்டிகள் குறித்த அதிக விபரங்கள் தேவைப்படுவோர் மாநில ஒருங்கிணைப்பாளரையோ, மாவட்ட ஒருங்கிணைப்பாளரையோ தொடர்பு கொள்ளலாம். 


புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் 


பா. ரவிச்சந்திரன் 
10, இரண்டாவது தெரு
பெருமாள் ராஜாத்தோட்டம்
ரெட்டியார்பாளையம்
புதுச்சேரி -10 
மின் அஞ்சல்: cerdpsf@gmail.com


விபரங்களுக்கு 0413 2290733, 94880 74341, 9442786122 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


மாநில ஒருங்கிணைப்பாளர் 


முனைவர்.அ.வள்ளிநாயகம் 

132சி,முனிசிபல் காலனி 6வது வீதி,      
தஞ்சாவூர்-613007                            
போன்-04362-240784                                  
செல்-94438 65864       

                                       


Friday, October 14, 2011

‘நோயர்’ விருப்பம்


வெகுகாலத்துக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று. ஒரு வயதான அம்மையார் மருத்துவரிடம் மூட்டு வலி என்று சென்றார். மருத்துவர் ஸ்டெதெஸ்கோப்பை எடுத்தார்.

அப்போதுஅந்த நோயாளி அதிச யித்தார். “நானும் எத்தனையோ டாக் டர்களிடம் காட்டிவிட்டேன். யாருமே இந்த குழாயை மூட்டில் வைத்துப் பார்க்கவே இல்லையே ராசா”

உஷாரான அந்த மருத்துவர் ஸ்டெதெஸ்கோப்பை மூட்டில் வைத்துப் பார்த்தார்.

பாட்டிக்கு பரம திருப்தி. அதில் வேடிக்கை என்னவெனில், மூட்டில் வைத்து விட்டு, பழக்கதோஷத்தில் டாக்டர் “மூச்சை நல்லா இழுத்து விடுங்க” என்றதுதான்!

ஒரு துணி எடுக்கச் செல்லும் போது நம் மனதில் ஒரு எதிர்பார்ப்பு இருப்பதுபோல், மருத்துவரிடம் செல்லும்போது நோயுற்றவர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இன்ன வியாதிதான் நமக்கு. அதற்கு இது தான் காரணம். இதுதான் வைத்தி யம் என்று ஒரு எதிர்பார்ப்போடு தான் வருவார்கள். திறமையைவிட இந்த ‘நோயர்’ விருப்பத்தைப் பூர்த்தி செய்வதே ஒரு மருத்து வரைப் புகழ்பெற்றவராக்குகிறது.

எல்லா நோய்களுக்கும் ஊசி போட்டால்தான் சரியாகும் என்பது பெரும்பாலான நோயர் விருப்பமாக உள்ளது. அதிலும் சிலர் வலது கை வலி என்று போனேன், இடதுகை யில் ஊசி போட்டுவிட்டார்கள் என்று நுகர்வோர் நீதிமன்றம் வரை போவதுண்டு.

நெல்லை டவுனில் ஒரு புகழ் பெற்ற மருத்துவர் இருந்தார். அவரது கிளினிக் திஹார் ஜெயில் போல் நிரம்பி வழியும். காரணம் அவரது தனித்தன்மையே. நாம் எந்தப்பகுதியில் வலி என் கிறாமோ அந்தப்பகுதியிலேயே ஊசி போடுவார். சற்றும் மிகைப்படுத்த லற்ற உண்மை இது. இது தெரியா மல் வரிசையில் காத்திருந்த ஒருவர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட் டதும், தலை தெறிக்க வெளியே ஓடி விட்டார். வேறு ஒன்றுமில்லை; அவர் மூல வியாதிக்காகச் சிகிச்சை பெற வந்திருந்தார்.

இப்பொழுதெல்லாம் குழந்தை பெறுவது கூட இயற்கையாக அன்றி நாள் நட்சத்திரம் பார்த்துப் பெரியவர் களின் விருப்பப்படிதான் நடைபெறு கிறது. “ரோகிணி நட்சத்திரம் வேண் டாம். மாமாவுக்கு ஆகாது. அதனால் இன்னும் இரண்டு நாள் கழித்து சிசேரியன் வைத்துக் கொள்ளலாமா டாக்டர்” என்று கேட்பது சாதாரண மாகிவிட்டது. எதிர்காலத்தில் மகப் பேறு மருத்துவமனைகளில் ட்யூட்டி டாக்டர் போல் ட்யூட்டி ஜோதிடர் களும் இருக்கலாம்.
நோயுற்றவரின் எதிர்பார்ப்பும், உடன் இருப்பவரின் விருப்பமும் வேறு வேறாக இருக்கும். மேலை நாட்டில் பத்து வருடங்களாக மூக் கடைப்பால் அவதிப்பட்டிருந்த ஒரு பெண், மூக்கடைப்பு சரியானதும், கணவர் மீது துர்நாற்றம் அடிக்கிறது என்று விவாகரத்து செய்துவிட்டார்.

எதற்காக சிகிச்சைக்கு வருகி றார் என்பதைத்தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். குடிப்பழக்கத் தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் என் னிடம் வந்தார். “குடிச்சு குடிச்சுக் கையெல்லாம் ரொம்ப நடுங்குது டாக் டர். எப்படியாவது நீங்கதான் இதை நிறுத்தணும்” என்றார்.

‘கவலைப்படாதீங்க! உங்க குடிப் பழக்கத்தை நிறுத்திடலாம்’ என் றேன். திடுக்கிட்ட அவர், “அதெல் லாம் வேண்டாம் டாக்டர். இந்த கை நடுக்கத்தை மட்டும்நிறுத்துங்க! சரக்கெல்லாம் கொட்டி நிறைய வீணாகுது” என்றார்.

ஒரே வியாதியால் இருவர் பாதிக் கப்படலாம். ஆனால் இருவரும் ஒன் றல்ல. நேயர் விருப்பம்போல் நோயர் விருப்பமும் தனித்தன்மையுடையதே.

டாக்டர் ஜி.ராமானுஜம்
நன்றி: புதிய ஆசிரியன் 

Thursday, September 22, 2011

நவீன கருவிகளுக்கு அடிமையாவது ஆபத்து

சென்ற ஆண்டு கொல்கத்தாவில் 10-வது படிக்கும் ஒரு மாணவி தண்டவா ளத்தைக் கடக்கும்போது ரயில் மோதிய தில் அவளது உடல் கூழாகிவிட்டது. அலைபேசியைக் காதில் வைத்தபடி மூடப் பட்டிருந்த ரயில்வே கேட்டைக் கடந்து சென்ற அச்சிறுமி, 100 மீட்டர் தூரத்தில் வேகமாக ஒரு ரயில் வந்து கொண்டிருந் ததைக் கவனிக்கவில்லை. மற்றவர்கள் போட்ட சத்தமும் அவள் காதில் விழவில் லை. இந்த ஆண்டு ஹெளராவில் 10-வது படித்துக் கொண்டிருந்த நெருங்கிய நண் பர்களான இரு சிறுமிகளும் செல்போ னைக் காதில் வைத்தபடி தண்டவாளத் தைக் கடந்தபோது வேகமாக நெருங்கிக் கொண்டிருந்த ரயிலையோ, அருகிலிருந்த வர்கள் எச்சரிக்கை செய்து போட்ட கூச்ச லையோ கவனிக்கும் நிலையில் இல்லை. இவர்களெல்லாம் தங்கள் அலட்சியத்திற்கு விலையாக தங்கள் உயிரையே தர வேண்டியிருந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 

 சிங்கப்பூரில் ஒரு சிறு பெண் குழந் தையின் பெற்றோர்கள் கணினித் திரை யில் மூழ்கியிருந்தபோது, பசியால் துடித்த அக்குழந்தை இறந்தே போய்விட்டது. தென் கொரியாவில் கணினி விளையாட்டி லேயே நேரத்தைச் செலவிட்டுக் கொண்டி ருந்ததற்காகத் திட்டிய அம்மாவை ஒரு சிறுவன் கொலை செய்துவிட்டுப் பின்னர் தற்கொலையும் செய்து கொண்டான். உல கெங்கிலும் வயது வித்தியாசமின்றி பல ரைப் பிடித்து ஆட்டும் இந்த மோகத்திற்கு ‘தொழில்நுட்ப அடிமைத்தனம் என்ற பெயர் கூட வைக்கப்பட்டுவிட்டது. 

 மின்னணுக் கருவிகள் நுகர்வோர் பற்றிய ரிட்ரீவோ என்ற இணையதளம் நடத்திய ஓர் ஆய்வில் ஃபேஸ்புக் அல்லது டிவிட்டரில் மூழ்குவதைக் கட்டுப்படுத்த இயலாத பல பெற்றோர்கள் தங்களது கட மைகளைப் புறக்கணிப்பதாக ஒத்துக் கொண்டனர். தொழில்நுட்பக் கருவிகளுக்கு அடிமைகளாவது பெரும்பாலும் இளைஞர் கள்தாம். தங்களுடைய சமூக வலைத் தளங்களுக்குள் 15 நிமிடங்களுக்கொரு முறை செல்வதென்பது பலருக்கு பழக்க மாகிவிட்டது. சிறிது நேரம் அந்த வலைத் தளங்கள் செயலிழந்து போனாலும் அவர் களால் பொறுக்க முடிவதில்லை. உண வையும் உறக்கத்தையும் கூட இதற்காக மறப்பவர்கள் இருக்கிறார்கள். ஆன்லைன் உரையாடல்களிலோ செல்போன் விளை யாட்டுகளிலோ ஈடுபட்டிருக்கும்போது, கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய அவ சரத் தேவையைக் கூட தள்ளிப் போடக் கூடிய அளவு சிலர் கிறுக்குப் பிடித்தவர் களாக இருப்பது கவலைக்குரியது. இத்தகைய அளவுகடந்த தீவிரமான ஈடுபாட்டை உடற்கூறு வல்லுநர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவ தோடு ஒப்பிடுகின்றனர். 

தொழில்நுட்ப அடிமைகளை சிறிது நேரம் அவர்களுக் குப் பிரியமான கருவிகளிலிருந்து பிரித்து வைத்தபோது, போதைப் பொருள் கிடைக் காத போதைப் பொருள் அடிமைகள் படும் பாட்டினை ஒத்ததாக அவர்கள் நிலை இருந்ததாக வல்லுநர்கள் அந்த ஆய்வில் கண்டுபிடித்தனர். மேரிலாண்ட் பல் கலைக்கழகத்தில் ஊடகங்கள் பற்றிய சர்வ தேச மையம் 10 நாடுகளைச் சேர்ந்த 1000 பல்கலைக்கழக மாணவர்களிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், செல்போன் கள், எம்.பி.3 பிளேயர்கள் போன்ற சாத னங்களிலிருந்து 24 மணி நேரத்திற்கு விலகியிருக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோரால் அது இயலவில்லை. துக்கம். தனிமை, கவலை போன்ற மன அழுத்தங்களுக்கும் இதயப் படபடப்பு போன்ற உடல்நலப் பாதிப்புக ளுக்கும் ஆளானதாக பல மாணவர்கள் தெரிவித்தனர். செல்போன் அருகில் இல் லாவிட்டாலும், செல்போன் ஒலி கேட்ப தைப் போன்ற பிரமை ஏற்பட்டதாகக் கூட ஒரு மாணவன் தன் அனுபவத்தை விவ ரித்தான்! அன்றாடம் தொழில்நுட்பக் கரு விகளோடு இருக்கும் தீவிரப் பிணைப்பு காரணமாக குடும்ப உறவுகள் சீர்கெட்டு வருவதாக பிரபல உளவியல் நிபுணர் ஆண்டனி கிட்மேன் தெரிவிக்கிறார்.

 தொழில்நுட்பமும், தொழில்நுட்பக் கருவிகளும் உலகில் பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக் கின்றன. ஆனால் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அவற்றின் அடிமை களாக நாம் மாறிவிடக் கூடாது. அப்படி மாறினால் நம்முடைய உடல்நலம், சமூக உறவுகள், ஏன், சமயத்தில் உயிரையே கூட அதற்கு விலையாகத் தர வேண்டி யிருக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமுத மும் விஷம் என்ற முதுமொழி நம் வாழ் வின் ஒவ்வோர் அம்சத்திற்கும் பொருந்தி வரு வதை நாம் கவனத்தில் கொள்வது நல்லது. 

 பேராசிரியர் கே. ராஜு (உதவிய கட்டுரை : ஆகஸ்ட் மாத சயன்ஸ் ரிப்போர்ட்டர் தலையங்கம்)

Tuesday, September 6, 2011

பாட்டல் தண்ணீர் குடிப்பவரா ஒரு நிமிடம் :வீடியோ





பாட்டலில் அடைத்து வைக்கப்படும் தண்ணீரைக் குடிப்பது ஆரோக்கியமானது அல்ல.

Saturday, August 27, 2011

தேசிய அறிவியல் ஆசிரியர்கள் மாநாடு 2011


 தேசிய அறிவியல் ஆசிரியர்கள் மாநாடு, தேசிய அறிவியல் தொழில்நுட்ப மையம் (NCSTC)> அறிவியல் தொழில் நுட்பத்துறை(DST)  புதுடெல்லி,மற்றும் தேசிய அறிவியல் தொழில் நுட்பமைய கூட்டுக்குழு( NCSTC-NETWORKபுதுடெல்லி ஆகிய அமைப்புகள் இனைந்து கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இப்மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

 இம்மாநாடு நாட்டில் உள்ள அறிவியல் ஆசிரியர்களுக்கு இடையே அடிப்படையான தொடர்பை ஏற்படுத்தவும், அவர்களுக்கு இடையே அறிவியல் விழிப்புணர்வையும், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்தற்காக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இம்மாநாட்டின் மூலம் ஆசிரியகள் சமூகத்தினர்களிடையே புதிய கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும்,அறிவியல் கல்வியில் உருவாகி உள்ள ஆக்கபூர்வமான புதிய முறைகளை பரிமாறிக்கொள்ளவும், அடிப்படையாக அமைவதோடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவாகி உள்ள அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை மற்றவர்கள் பகிர்ந்துக்கொள்வதற்கான வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தி வருகிறது.



இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படும் இம்மாநாடு இந்த ஆண்டு “அறிவியல் கல்வியின் சாவல்கள் மற்றும் வளர்ச்சி”(Trends & Chanllengs in Science Education)  என்ற கருப்பொருட்ளை மையமாகக் கொண்டும்இ துணைத் தலைப்புகளாக 1. “அறிவியல் கற்றல் -கற்பித்திதலில் புதுமைகள்” 2. “அறிவியல் பாடங்களை தொடர்புப்படுத்துதல்” 3. “வேதி அறிவியல் மற்றும் வாழ்க்கைத்தரம்” ஆகிய தலைப்புகளில் நடத்தப் படுகிறது. இம்மாநட்டில் ஆசிரியர்கள்இ கல்வியாளர்கள், ஆராய்ச் சியாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், பி.எட் கல்லுரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியரிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கலாம்.



 மேற்கண்ட முன்று தலைப்புகலை அடிப்படையாக கொண்டு ஆங்கிலம் அல்லது இந்தியில் ஆய்வுகட்டுரைகள், சுவரொட்டிகள் தயாரித்து வரும்  அக்டோபர் 15 2011 க்குள் பேரா.P.ளு வர்மா, தேசிய ஒருங்கிணைப்பாளர், தேசிய அறிவியல் ஆசிரியர்கள் மாநாடு, அறிவியல் கல்லலூரி, பட்னா,பீகார்-800005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு: http://www.ncstc-network.org/ntsc6/index.php மற்றும் புதுவை அறிவியல் இயக்கத்தை அனுவகவும். தொடர்பு எண்கள்: 04132290733, 9488074341, 944322588.


Friday, August 5, 2011

புதுவை "கல்விக் கருத்தரங்கம்"




புதுவை அறிவியல் இயக்கம் சார்பாக 06.08.2011 சனிக்கிழமை கல்விக் கருத்தரங்கமும் புதுவை அறிவியல் இயக்கத்தின் பொதுக்குழுவும் நடைபெற உள்ளது.

காலை 10.00 மணிக்கு புதுவை செயின்ட் பேட்ரிக் மேனிலைப் பள்ளி வளாகத்தில் அறிவியல் இயக்கத்தின் தலைவரும், ஜிப்மர் குழந்தைகள் நல தலைமை மருத்துவருமான திரு.S.சினிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெறும் கருத்தரங்க துவக்க விழாவிற்கு மாண்புமிகு கல்வி அமைச்சார் P.M.L கல்யாணசுந்தரம் அவார்கள் கருத்தரங்கை துவக்கி வைத்து சிறப்புரையாற்றவும் உள்ளார்.

தலைசிறந்த கல்வியாளரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் வே.வசந்திதேவி அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்.

சமச்சீர் கல்விகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர்களில் ஒருவரும் கல்வியாளருமான N. மாதவன் அவர்களும், “புதுவையின் உயர்கல்விகுறித்து புதுவை பல்கலைக் கழகத்தின் சர்தேச கல்வி மற்றும் அரசியல் துறை பேராசிரியர் டாக்டர். லாசரஸ் சாம்ராஜ் அவர்களும்,  “கற்பித்தல் முறையும் ஆசிரியர் கல்வியும்குறித்து புதுவை அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் டாக்டர்.தா.பரசுராமன் அவர்களும்,  “கல்வித்தரம்குறித்து புதுவை அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் ஹேமாவதி அவர்களும், “இலவசக் கட்டாயக் கல்விகுறித்து புதுவை அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் தட்சணாமூர்த்தி அவர்களும், உரை நிகழ்த்த உள்ளனர். அறிவியல் இயக்க செயலர்  ரவிச்சந்திரன் கருத்தரங்க வரவேற்புரையாற்றவும், அறிவியல் இயக்க பொதுச்செயலார் s.சேகர், நோக்கவுரையாற்றவும், செயலர் ஆர்.மாரிமுத்து நன்றியுரை நிகழ்த்தவும் உள்ளனர்.

 பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு காரைக்கால் மாவட்டத் தலைவர் பேராசிரியார் கே.சம்பந்தம் தலைமை ஏற்கவும், செயல் அறிக்கையை இயக்க பொதுச்செயலாளர் S.சேகர் அவர்கள் முன்வைக்கவும், பொருளாளர் R.ரமேஷ் நிதிநிலை அறிக்கை வைக்கவும் உள்ளார். செயலாளர் மா.சுதார்சன் நன்றியுரையுடன் முடியும் பொதுக்குழுவில் அறிவியல் இயக்கத்தின் எதிர்கால வேலைகளும் திட்டமிடப்பட உள்ளது. புதுவையின் கல்வி நிலைகுறித்து, கல்விவளர்ச்சி குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

Saturday, July 30, 2011

மனித மூளைக்கு வயது 80000 ஆண்டுகள்

                  படிம ஆராய்ச்சிகளும் மரபணு செல்களில் ஏற்படும் மாற்றங்களும் மனித இனம் (ஹோமோ சேப்பியன்ஸ்) 2,00,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கின்றன. ஆனால் தற்கால மனிதனைப் போல சிந்திக்கக் கூடிய மூளை ஆரம்பக்கட்டத்திலேயே உருவாகிவிடவில்லை. தற்போது தென்னாப்பிரிக்கா என்று அறியப்படும் பூமிப்பகுதியில் 80,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களிடம் இத்தகைய மூளை வளர்ச்சி தொடங்கியதாகக் கொள்ளலாம் எனப் புதிய புதைபொருள் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

       அந்த மனிதர்கள் கற்களைக் கூர்மைப்படுத்தி அவற்றை ஈட்டிமுனைகளைப் போல் பயன்படுத்தத் தெரிந்தவர்களாக இருந்துள்ளனர். இந்த நுட்பத்தைக் கற்றுக் கொள்ள மனித இனத்திற்கு நீண்ட காலம் பிடித்திருக்கிறது. இந்த நுட்பம் கைவந்தபிறகு மனிதர்களிடையே இருந்த சமூக உணர்வு மேம்படத் தொடங்கியிருக்கிறது. நவீன மனிதர்கள் உருவாக அது அடித்தளமிட்டிருக்கிறது. 80,000 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மூளை வளர்ச்சியின் பரிணாமமே இன்றைய மனித மூளை எனக் கொள்ளலாம்.


(தகவல் : தி இந்து)

Saturday, July 23, 2011

தண்டுப்பகுதியில் வேர் முளைத்து வளரும் அதிசய மரம்

பொதுவாக தாவரங்களின் வேர்கள் தரையில்தான் இருக்கும் ஆனால் சில தாவரங்களில் வேர் தரைக்கு மேல் வளரும்.

சில தாவரங்களில் தண்டுபகுதிகளிலும் வேர் முளைக்கும்.

அவிசினியா (நெமட்டோபோர்) வகையை சேர்ந்த தாவரங்களின் வேர்கள் தரைக்கு மேலே வளரக்கூடிய வகையை சேர்ந்தது.

நீங்கள் ஆல மரத்தைப்பார்த்திருப்பீர்கள் அவைகளின் வேர்கள் தண்டுகளில் ஆரம்பித்து மண்னை நோக்கி வளர்கின்றன.
 ஆனால் நீங்கள் பார்க்கும் இந்த மரம் தூங்குமூஞ்சி மரவகையை சேர்ந்தது இதில் தண்டுப்பகுதியில் வேர் முளைத்து வளர்வது அதிசயமானது இந்த மரம் காரைக்கால் கல்வித்துறை அலுவலகத்தில் உள்ளது.

Wednesday, July 20, 2011

பாலும் மனிதர்களும்



நம்முடைய வாழ்வில் பால் மிக முக்கியமான பொருள். தேனீர் அருந்த பால் தேவை, காப்பி அருந்த பால் தேவை, எண்ணற்ற பருகும் பொருள்களுக்கு பால் தேவை. வெறும் பால் காலையில், இரவில் எல்லோரும் குடிக்கின்றனர். பால் மூலம் தயார் செய்யப்படும் பல பொருட்களை சாப்பிடுகிறோம். பாலிலிருந்து தயிர் கிடைக்கிறது, வெண்ணெய் கிடைக்கிறது, சீஸ் கிடைக்கிறது. மில்க் ஸ்வீட்ஸ் என்ற இனிப்புப் பண்டங்கள் கிடைக்கின்றன.

ஆனாலும் உலகில் எல்லோரும் பால் சாப்பிடுவதில்லை. பலருக்கு பால் ஒத்துக் கொள்வதில்லை. சில நாடுகளில் யாரும் பால் அருந்துவதில்லை. பலருக்கு பால் சாப்பிட்டால் வாந்தி, பேதி ஏற்படுகிறது. ஏன் இப்படி என்று அறிவியல் வல்லுனர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
இதில் ஒரு ஆராய்ச்சி மிகவும் சுவையானது. பாலூட்டி இனத்தில் உள்ள தாய் மிருகங்களிடம்தான் பால் வருகின்றது. மனிதர்கள், நாய், பூனை, பன்றி, எலி, ஆடு, மாடு, ஒட்டகம், குதிரை என்று பல மிருகங்களில் உடலில் இருந்து வருகின்றன. அவை அனைத்திலும் பிறந்த குழந்தைகளுக்கு உணவாக பால் அமைகிறது. வளர்ந்து விட்ட பிராணிகள் பால் அருந்துவதில்லை. வயதான மிருகங்களிடம் இருந்தும் பால் வருவதில்லை.
பாலில் லாக்டோஸ் என்ற ஒரு வகைச் சர்க்கரை உள்ளது. இந்த லாக்டோஸை, ஆற்றலாக மாற்றுவதற்கு லாட்டேஸ் என்ற ஒரு எண்ணையும் நமது உடலுக்குத் தேவை. எல்லாப் பாலூட்டி இனங்களிலும் பிறந்த குழந்தைகளுக்கு லாக்டோஸ் அதிக அளவில் இருக்கும். அதனால் தான் சிறு குழந்தைகளுக்கு தாய்ப்பால் முக்கியமான உணவாகும். இரண்டு வருடங்களுக்குப்பின் லாட்டேஸ் அளவு குறைந்து விடும்.
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் பால் அருந்துகின்றனர். ஆனால் நமது முன்னோர்களால் குழந்தைப்பருவம் தாண்டி வளர்ந்தபின் பால் அருந்தியிருக்க முடியாது. மிருகங்களிடம் இருந்துபால் கறக்க ஆரம்பித்த பிறகுதான் சிலருக்கு பால் அருந்தும் திறன் அடைந்திருக்க வேண்டும். மனித வரலாற்றில் பால் அருந்தும் திறன் பெற்றது மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. நம் முன்னோர்களுக்கு அது பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருக்க வேண்டும்.
நமது மரபணுக்களிலேயே ஒரு மாறுதல் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிலருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். பாலை செரிக்கும் வகையில் மரபணு மாற்றமடைந்ததால்தான் நம்மால் எல்லா வயதிலும் பால் அருந்த முடிகிறது.
இவைபற்றி ஆராய்ந்த அறிவியல் வல்லுனர்கள் முதலில் உலகில் எந்தெந்தப் பகுதிகளில் பால் அருந்துகிறார்கள் என்று கணக்கிட்டனர். வடக்கு மத்திய ஐரோப்பாவில் எல்லோரும் பால் அருந்துகிறார்கள். ஆனால் ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா இங்கெல்லாம் பால் பொருட்களை மக்கள் தவிர்க்கிறார்கள்.

சமீபகால ஆராய்ச்சியில் மத்திய ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரியை சுற்றியுள்ள பகுதிகளில்தான் சுமார் 7500 வருடங்களுக்கு முன்னர்தான் முதன் முதலாக பால் அருந்தும் பழக்கம் தோன்றியிருக்க வேண்டும் என்று கணக்கிட்டுள்ளார்கள்.
மற்றுமொரு ஆராய்ச்சியில் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் உபயோகித்த மண் சட்டிகளையும் பானைகளையும் இது சம்பந்தமாக ஆராய்ந்துள்ளார்கள். பால் கறப்பது இதற்கும் முன்னரே ஏற்பட்டிருக்க வேண்டும். பெண் இன மிருகங்கள் பெருமளவில் வைத்திருக்கப் பட்டிருந்தன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனாலும் பால் அருந்தும் பழக்கம் 7500 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
பால் அருந்தாவிட்டாலும் பால் ஏன் கறக்கப்பட்டது? அப்படிக் கறந்தபால் எதற்கு பயன்படுத்தப்பட்டது? பால் புளிக்க வைத்து தயிர், வெண்ணையாக மாறும் போது அவற்றில் லாக்டோஸ் பெருமளவில் எடுக்கப்பட்டு விடுகிறது. எனவே இந்த பால்பொருட்களை எல்லோரும் உண்ணலாம்.
வெப்பமான நாடுகளில் பாலை புளிக்க வைத்து தயிர் பெறுவது மிகச் சுலபம். பானையில் பாலை ஊற்றி வெயிலில் வைத்து விட்டால் போதும், தயிர் உருவாகி விடும்.
பால் கறக்கும் பழக்கம் ஏற்பட்ட காலத்திலிருந்து சுமார் 2000 ஆண்டு பால் அருந்தாதவர்கள் ஏன் பிறகு ஏன் பால் அருந்த ஆரம்பித்தார்கள்? இதற்கு சரியான விடை இன்னமும் கிடைக்கவில்லை.
ஒரு விடை. பயிர்களும், மிருகங்களும் தொடர்ந்து கிடைப்பதில்லை. பால் தொடர்ந்து கிடைக்கக் கூடிய உணவு. பால் மிகவும் மலிவானது சக்திமிகுந்தது. குடி தண்ணீரை விடவும் ஆரோக்கியமானது.

பேரா.வி.முருகன்
இளைஞர் முழக்கம்
தொடர்பு முகவரி: 57/21, அருணோதயா காம்ப்ளக்ஸ் 2வது மாடி,ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, பெரியமேடு, சென்னை - 03.தொலைபேசி: 044-25611348
ஆண்டு சந்தா: ரூ.75