Saturday, December 24, 2011

சர்வதேச அளவில் நடக்கும் அறிவியல் உருவாக்குவோம் திட்டத்திற்கு ஆய்வு அறிக்கைகள் வரவேற்பு


புதுவை அறிவியல் இயக்கம்பிரான்ஸ் நாட்டு பிரான்ஸ் பல்கலைக்கழகம் தெற்கு 11 உடன்  (University of Paris, South 11, France) இணைந்து சர்வதேச அளவில் அறிவியல் உருவாக்குவோம் (Make ScienceCompetition) திட்டத்தை / போட்டியை இந்தியாவில் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக புதுச்சேரிஅரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் பங்குபெறும் வகையில் புதுவை அறிவியல் இயக்கம், புதுச்சேரிஅரசு பள்ளிக் கல்வித்துறையின் மாநில பயிற்சி மையத்துடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திவருகிறது.

2012 ஆம் ஆண்டிற்கான அறிவியல் உருவாக்குவோம் போட்டிக்கான ஆய்வறிக்கைகள் வரவேற்கப்படுகின்றன. விதிமுறைகள்:

1.     இப்போட்டியில் புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளிகள் மட்டுமே பங்கேற்க முடியும்.

2.     இத்திட்டம் ஜனவரி 2012 முதல் ஏப்ரல் 2012 வரை நடைபெறும்.

3.      7வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டுமே பங்குபெறலாம்.

4.     ஆய்வுத்திட்டம் இயற்பியல், வேதியல், கணிதம், அடிப்படை உயிரியியல் ஆகிய பிhpவுகளில் இருக்கலாம்.

5.     ஆங்கிலத்தில் மட்டுமே திட்ட குறிப்புகளை ஆனுப்ப வேண்டும்.
  
6.      கடைசித்தேதி வரும் 2011 டிசம்பர் 28க்குள்  அனுப்ப வேண்டும்.

7.      மேலும் விவரங்களுக்கும் திட்டத்திற்காக விண்னப்படிவத்திற்கும் கிழ்ண்ட மின்அஞ்சல் முகவயிலும் தொலைப் பேசியிலும் தொடர்பு கொள்ளலாம்: மின்அஞ்சல் : cerdpsf@gmail.com  Ph:  0413 -2290733

ஆய்வு அறிக்கைகள் மின் அஞ்சல் மூலம் பெறப்பட்டு அவை பிரான்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கபட்டும் அவற்றில் சிறந்த 12 ஆய்வுத்திட்டங்களை மட்டும் தேர்வு செய்து அனுப்புவார்கள். அந்த திட்டங்கள் துவக்கத்திற்கான உதவி ஊக்கதொகை வழங்கபடும். பிறகு அந்த திட்டம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு அவை மீண்டும் பிரான்ஸ் பல்கலைக்கழத்திற்கு அனுப்பட்டு வீடியோ கான்பிரன்சிங் மூலம் சிறந்த 4 ஆய்வு குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிக்கு  சான்றிதழும் முதல் பரிசுக்கு 300  Euro முன்று இரண்டாம் பரிசுக்கு தலா 100 Euro அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை அனைத்து அரசுப் பள்ளிகளுகம் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Friday, December 23, 2011

விண்வெளிக்கு வீரர்களை கொண்டு செல்லலும் புதிய விண்கலம் ஸ்பேஸ்எக்ஸ்


விண்வெளி அமைப்பான நாஸா தனது ஷட்டில் ரக விண்கலங்கள் உபயோகிப்பதை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில், ஸ்பேஸ்எக்ஸ்ரக விண்கலங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரஉள்ளது.

ஏறக்குறைய 30 ஆண்டுகள் 135 முறை ஏவப்பட்ட ஸ்பெஸ் ஷட்டில்ரக விண்கலங்கள் ஏராளமான விண்வெளி வீரர்களை விண்ணுக்கு கொண்டு சென்றது. தற்போது இதற்கு பதில் மிக நவீனரக ஷட்டில்களை நாஸா உருவாக்கி வருகிறது. அதுவரை வீரர்களை விண்ணுக்கு அழைத்துச் செல்லவும் பூமிக்கு திரும்பச் செலுத்தவும் ரஷ்யாவின் சோயூஸ் கேப்சூல்களையே அமெரிக்கா சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் அமெரிக்காவில் பல விண்துறை நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள டிராகன் ரக கேப்சூலுக்கு நாஸா அனுமதி தந்துள்ளது. இந்த கேப்சூல் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். இதில் பயணிக்கும் விஞ்ஞானிகள் வானில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்று, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு விட்டு, இந்த கேப்சூலிலேயே பூமிக்குத் திரும்புவர்.ஷட்டில் ரக விண்கலம் விமானத்தைப் போல பூமியில் தரையிறங்கும்.ஆனால் இந்த கேப்சூல் பாராசூட் மூலம் பூமியில் தரையிறங்கும்.
ரஷ்யா தான் ஆரம்பம் முதலே கேப்சூல்களை பயன்படுத்தி வந்தது. தற்போது அமெரிக்கா கேப்சூலை பயன்படுத்தவுள்ளது. அமெரிக்கா 2012 பிப்ரவரி மாதம் 7ம் தேதி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் என்றும் இதில் வீரர்கள் செல்ல மாட்டார்கள்என்பதும், சரக்குகள் ஏற்றிச்செல்லும் இந்த கேப்சூல், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அதை கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்குள்ள விஞ்ஞானிகள் சரக்குகளை இறக்கிய பின், இந்த கேப்சூல் பூமிக்கு திரும்பும். பசிபிக் கடலில் பாராசூட் முலம் இந்தக் கலம் தரையிறங்கும்இந்த விண்கலத்தை உருவாக்கியுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் பே பால் நிறுவனரான எலோன் முஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, December 22, 2011

விவசாய நிலப்பரப்பு வீழ்ச்சி எதிர்கால இந்தியாவின் வீழ்ச்சி
























5 ஆண்டுகளில் 8 லட்சம் ஹெக்டேர் நிலம் குறைந் துள்ளது. வேளாண் சாராத இதரப் பணிகளுக்கு அவை பயன்படுத்தப்பட்டதால் விளைநிலம் குறைந்துள் ளது என நாடாளுமன்றத் தில் செவ்வாய்க்கிழமை யன்று தெரிவிக்கப்பட்டது.

2003-04ம் ஆண்டு 1 லட்சத்து 83 ஆயிரத்து 186 ஹெக்டேர் நிலம் குறைந்துள்ளது. 

2008-09 ம் ஆண்டில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 385ஹெக்டேர் நிலம் குறைந்துள்ளது 

என மக்களவையில் வேளாண் துறை இணையமைச்சர் ஹரிஷ் ரவாத் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.

இந்த விளைநிலங்கள்- கட்டிடங்கள், சாலைகள், ரயில்வே பணிகளுக்கு பயன் படுத்தப்பட்டுள்ளன. 

இருப்பினும் உணவு தானிய உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது என்றும், விளைநிலம் சிறிய அளவு குறைந்துள்ளதால்,எந்த எதிர்மறை விளைவையும் வேளாண் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. 


விவசாய நிலங்களின் மீது நடக்கும் அநியாய ஆக்கிரமீப்பை எப்படியாது தொடர வேண்டும் என்ற லாபவெறி அப்பட்டமாக தெரிகிறது. 

எதிர்கால சமூகத்தின் மீக துயரமான வாழ்வுக்கு நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

Wednesday, December 14, 2011

மாற்றங்களை உருவாக்கும் லஞ்ச ஒழிப்புக் கூட்டங்கள்


புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகின்றன.

÷புதுச்சேரியில் கடந்த 4 ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்களில் பல்வேறு பிரச்னைகள் கிளப்பப்படுகின்றன. இதனால் நிர்வாக ரீதியாகவும், அதிகாரிகளின் செயல்பாடுகள் அளவிலும், தன்னார்வலர்களின் போக்குகளிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

÷லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் ஏற்கெனவே சம்பிராயத்துக்காக தலைமைச் செயலகத்தில் யாருக்கும் தெரியாமல் நடத்தப்பட்ட காலம் உண்டு. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக இந்தக் கூட்டம் நடத்துவதிலேயே பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு எந்தத்துறை லஞ்ச ஒழிப்புக் கூட்டத்தை நடத்துகிறதோ அந்தத்துறையின் அரசு செயலர் வர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு சில இடங்களில் போராட்டமும் நடந்து அந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

÷புதுச்சேரியில் தாவரவியல் பூங்கா இருக்கிறது. பணியாளர்கள் இருக்கிறார்கள். அப்படியிருக்க துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு பூங்கொத்து வாங்கிக் கொடுக்க வேளாண்துறை ரூ.13 லட்சம் செலவிட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்திருக்கிறது என்று லஞ்ச ஒழிப்பு கூட்டத்தில் சுட்டிக் காட்டினார்கள். இதையடுத்து இனிமேல் பைசா செலவு இல்லாமல் வேளாண்துறை சார்பில் பூங்கொத்து தயார் செய்து கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

÷தனியார் நிறுவனம் குப்பை வாருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட நகராட்சி ஊழியர்கள் வேலை எதுவும் செய்யாமல் சம்பளம் பெறுகின்றனர் என்று சுட்டிக் காட்டியப் பிறகு அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புக் கூட்டத்தில் உறுதி அளித்தனர். ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் ஊழியர் அல்லது அதிகாரி பணியாற்றுவது லஞ்சத்துக்கு ஒரு வகையில் காரணமாக இருக்கிறது. அவர்களை வேறு இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இப்படி நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை லஞ்ச ஒழிப்புக் கூட்டம் கொண்டு வந்துள்ளது.

÷லஞ்ச ஒழிப்புக் கூட்டங்களில் உயர் அதிகாரிகள் வருவதால் கீழ்நிலையில் பணியாற்றும் அதிகாரிகளும் பங்கேற்றனர். இதனால் பணிகளில் தேக்கம், கடமையைச் சரியாகச் செய்யாதவர்கள், விதிமுறைகளை மீறி தனியாருக்குச் சாதகமாக நடந்து கொண்டோர், விவசாயிகளுக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுவோர் என்று இக் கூட்டங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டனர். மேலும் ஒரு சில கூட்டங்களில் ஒரு சில அதிகாரிகளின் சொந்த விஷயங்கள் கூட இக் கூட்டங்களில் விமர்சனம் செய்யப்பட்டன. இதனால் அதிகாரிகளிடம் ஒருவிதமான பயம் ஏற்பட்டிருக்கிறது.

÷பொதுமக்கள் எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருக்கிறார்கள் என்பதை கீழ் பணியாற்றும் அதிகாரிகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எல்லா அதிகாரிகளையும் இந்தக் கூட்டத்துக்கு வரவழைத்தேன் என்று ஓர் உயர் அதிகாரி கூறியிருந்தார். லஞ்ச ஒழிப்புக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தவிர்த்த பெரும்பாலான அதிகாரிகள் நீதிமன்ற வழக்குக்குச் செல்ல வேண்டியிருக்கிறது என்று காரணம் கூறி தப்பிக்கப் பார்த்தனர்.     

இக் கூட்டங்களில் பங்கேற்று லஞ்சம் தொடர்பாகவும் முறைகேடுகள் தொடர்பாகவும் பேசிய பலரும் ஆவணங்களுடன்  வந்திருந்தனர். அதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர்கள் பெற்றிருந்த விவரங்கள்தான் காரணம். அதிகாரிகளுக்கே தெரியாத பல்வேறு விஷயங்களை அவர்கள் கைவசம் வைத்திருந்தனர்.

÷குடிநீர் பிரச்னை, தெருவிளக்குச் சரியாக எரிவதில்லை உள்ளிட்ட பொது பிரச்னைகளில் கவனம் செலுத்தவும் இந்தக் கூட்டம் வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

பொதுவாக அரசு ஊழியர்கள் என்பவர்கள் பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டியவர்கள். மக்களின் வரிப்பணத்தில்தான் அவர்கள் சம்பளம் பெறுகின்றனர் என்று இந்த லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்களில் தன்னார்வலர்கள் பலரும் ஆவேசத்துடன் நடந்து கொண்டனர். ஒரு சில நேரங்களில் வரம்பை மீறும் வகையிலும் அவை இருந்தன. நிதான போக்கு இவர்களிடம் காணப்படவில்லை. இதைக் கட்டுப்படுத்தும் வகையிலும்,
பங்கேற்கும் எல்லோருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலான முறையும் பொதுவாகக் கடைப்பிடிக்காமல் போனதுதான் இதற்குக் காரணம்.

÷மாதந்தோறும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தினால் பல்வேறு பிரச்னைகள் தீர்க்க வழி ஏற்படும். இதற்குக் கூட்டம் போட்டு பேசுவதைக் காட்டிலும் உயர் அதிகாரிகள் உட்கார்ந்து பிரச்னைகளை மட்டும் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். லஞ்ச ஒழிப்புக் கூட்டம் ஒரு சில மாற்றத்தை உருவாக்கியுள்ளது உண்மை. இக் கூட்டத்தை நடத்தினால் மட்டும் லஞ்சம் ஒழிந்துவிடாது.


 நடைமுறையில் லஞ்சம் கொடுக்காமல், வாங்காமல் இருப்பதற்கான நிர்வாக முறைகளில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் லஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து ஒழிக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.