Monday, October 8, 2012

14th State Conference : November 4th 2012

PSF is gearing towards the 28th Year of its founding. Started in 1985, PSF is completing 27 years by 2012 and stepping into the 28th year. The Bi-Annual Organizational Conference of PSF is scheduled to be held on the 4th November 2012.

The Conference will have about 200+ delegates drawn from a very wide variety of its membership - women, school teachers, students, farmers, youth, government employees, LIC and Bank staff etc. and the venue is Keerthi Mahal, near to the Pondicherry Bus Stand.

Those who wish to be a delegate to the Conference, please enroll your name with PSF at its Office at No.10, Second Street, Perumal Raja Thottam, Reddiarpalayam, Pondicherry-10. (Phone: 0413-2290733: Email: cerdpsf@gmail.com ).


Sunday, July 8, 2012

கடவுள் என்ற கருத்துக்கு சவக்குழி நோன்டிய கடவுள்துகள்


























பிரபஞ்ச ரகசியம் என்று ஒரு சொல் உண்டு. பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஆன்மிகம் சொல்கிறது. ஆனால் விஞ்ஞானம் அதைக் கொஞ்சம் மாற்றிச்சொல்கிறது; அணுக்களால் ஆனது உலகம் என்று.

13750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிக்-பேங்க் எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது.
எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன. நாம் வாழுகிற பூமி, நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி, செல்போன், மேசை, நாற்காலி, பேனா, மோட்டார் வாகனங்கள், இப்படி எல்லாமே அணு சேர்க்கையில் உருவானவைதான். இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான்.
அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது. அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால், பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின்போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

இதற்காக பிரான்சு-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் (அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம்) ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைத்து, உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.
இதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன. 12-ஆவது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ஹிக்ஸ் பாசன் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தாலும்,  இந்த ஹிக்ஸ் போசான் அல்லது இகிசு போசானைக் கடவுள் துகள்(God Particle) என்றும் குறிப்பிடுவர், ஆனால் இதைக் கண்டுபிடிக்க அரிதாக இருந்ததால், "கிடைக்கமாட்டேன் இருக்கின்றதே" என்னும் பொருளில் "goddamn particle" என்று நோபல் பரிசாளர் இலியான் இலேடர்மன் (Leon M. Lederman) குறிப்பிட்டதால், அது பதிப்பாளர்களால் சுருக்கம் பெற்று கடவுள் துகள் என்று பிழையான பொருளுடன் வழங்காயிற்று. 

இந்தத் துகளின் பண்புகளை மிகவும் ஒத்த ஓர் அணுத்துகளை, சூலை 4, 2012, பெரிய ஆட்ரான் மோதுவியில் நிகழ்த்திய இரண்டு தனித்தனி செய்நிலை மெய்த்தேர்வில் இருந்து கண்டுபிடித்தனர். "225GeV/c2 நிறையுடன் (ஏறத்தாழ 133 நேர்மின்னிகள் நிறை) உள்ள புதிய அணுத்துகள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

 கடவுள் துகளுக்கு இசைவான இணை அணுவியல் துகள் (New Subatomic Particle) என ஹாட்ரன் மோதி (Large Hadron Collider - LHC) விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கடவுள் துகள் உண்மையில் இருக்கிறதா? அப்படியாயின் இதன் நிறை (Mass) என்ன என்தை கண்டுபிடிக்க கடந்த 45 வருடங்களாக ஆராய்ச்சிகள்  மேற்கொள்ளப் பட்டுவந்தன. குறித்த ஆராய்ச்சியின் தொடக்க நிலை முடிவுகளாக இவை கணிக்கபட்டுள்ள போதும், இவை ஆச்சரியந்தருபவையாகவும், உணர்ச்சிகரமானதுமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அடிப்படை அறிவியல் (Fundemental Science) என்பது இந்த உலகத்துக்கு பொதுவானது. அது தனித்து யாரும் உரிமை கோரமுடியாது. அடிப்படை அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் (Appoled Science) இரண்டையும் சமமாகவே உலக மக்கள் கருத வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் உண்பவற்றில், ருசியானது எது? என்பது மட்டும் உங்களுக்கு தெரிந்திருந்தால் போதாது. 

நஞ்சானதும் எது என தெரிந்திருக்கவேண்டும். இந்த ஆராய்ச்சிகள் அடிப்படை அறிவியலுக்கும், பயன்பாட்டு அறிவியலுக்கும் இடையிலான ஆழமான முடிச்சுக்களை நோக்கி செல்வதாக குறிப்பிட்டனர். இந்த அணுத்துகள் கண்டுபிடிப்பு, நமது பேரண்டம் தொடங்குவதற்கு முன் எதுவும் இருந்ததில்லை, வெறும் சூனியமாகவே இருந் தது என்ற கருத்தை நிராகரிக்கிறது. கார்ல் மார்க்ஸ் சொன்னதுபோல், எங்கும் எப்போதும் பொருள் என்பது இருந்து வந்திருக்கிறது. பொருள் என்பதற்கு ஆதி - அந்தம் இல்லை என்பதை மெய்ப்பிக்கிறது.இந்தக் கண்டுபிடிப்பால் பேரண்டம் உரு வாவதற்கு முன் கருமைப்பொருள் இருந்தது - கருமைப்பொருள், ஒளிப்பொருள் என இருந் தது என்ற கருத்து வலுப்படக்கூடும். இத னால், மக்கள் வாழ்வுக்கு என்ன பயன் என்ற கேள்வி எழுவது இயல்பு. 

 பேரண்டத்தையும், உலகத்தையும், வாழ்க் கையையும் அறிவியல் பூர்வமாக புரிந்து கொள் வதற்கு இதுவும் உதவும்.இந்த ஆராய்ச்சிக்காகவே உருவாக்கப் பட்ட சோதனைக் கருவிகளும், காந்தப் புலன் கருவிகளும் எதிர் காலத்தில் மருத்துவ சோத னைகளுக்கு மிகவும் பயன்படும். பொருளின் “திரட்சி” சுருக்கப்பட்டு, செயல் திறன் அதிக ரிக்கப்படும். அதனால் என்ன பயன்? எடுத் துக்காட்டாக இன்று ஒரு ஜெட் விமானம் 200 டன் எடையில் தயாரிக்க முடிகிறது. இந்த கண்டுபிடிப்பின் கோட்பாடுகளை பயன் படுத்துவதன் மூலம், அதே விமானத்தை 20 டன் எடையில் தயாரிக்க முடியும்! இதனால், எரிபொருள் செலவு மிகப்பெருமளவுக்கு சேமிக்கப்படும்.வேறு கோள்களுக்கு விண்வெளிக் கப்பல் களை அனுப்புவது என்பது இன்று ஒரு கண் டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு விமானத்தில் செல்வதுபோல் எளிதாகிவிடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொருள் முதல்வாத சிந்தனைகளை உரத்து உரைக்கும் இந்த அணுத்துகள் ஆராய்ச்சி யில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். கடவுள் என்ற கருத்துக்கு சவக்குழி நோன்டிய கடவுள்துகள் எப்படியோ கடவுள் என்ற கருத்துக்கு மரண அடிவிழுந்து அதன் மூலம் மனிதர்கள் தங்களின் தவறுகளையும் எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ள அறிவியலின் துணையை முழுமையாக நம்புமும்  காலம் நெருங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது

Thursday, May 17, 2012

அறியாமையும் அச்சமுமே சோதிடத்திற்கு அடித்தளம்


அறிவியல் மனநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்கே சோதிடம் எதிரானது. ஆனால் நம் நாட்டின் பெரும் பாலான மக்களுக்கு சோதிடமே உந்துசக்தியாக இருக்கிறது. படிப்பறி வற்றவர்கள்தான் இந்த மோகத்திற்கு பலியாவார்கள் என்பதும் இல்லை. படித்தவர்களை சோதிட அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கக்கூடியதாக அவர்கள் படிக்கும் படிப்பு இல்லை. மேலைநாட்டு சோதிடமாக இருந்தா லும் சரி, இந்திய சோதிடமாக இருந்தாலும் சரி.. அதில் அறிவியலுக்குப் பொருந்திவரக் கூடிய தன்மைகள் அறவே கிடையாது. மனிதர்களின் அறியாமை மற்றும் அச்சம் இரண்டின் விளைவாக உருவானதே சோதிடம் என்று சொல்வது மிகையாகாது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் வானத்தைக் கூர்ந்து பார்த்து சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள் என்பது உண்மை.

ஆனால் அவர்கள் கண்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் அவர்களால் அறிவியல் விளக்கம் சொல்ல இயலவில்லை. இரவு வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களின் வடிவ அமைப்புகள் மாறுவது, சந்திரனின் வளர்பிறை தேய்பிறைகள், நட்சத்திரங்களைப் போன்று தோற்றமளிக்கும் கிரகங்களின் சஞ்சாரங்கள், எங்கிருந்தோ தோன்றி பிறகு மறையும் வால்நட்சத்திரங்கள் போன்ற விண்வெளி நிகழ்வுகள் பற்றி சரியான விளக்கம் அளிக்கும் அள வுக்கு அன்றைய அறிவியல் வளர்ந் திருக்கவில்லை. ஆதிகால மனிதர் களுக்கு இவை எல்லாமே அதிசயங் களாகத் தோன்றியிருக்க வேண்டும். சில பிரகாசமான நட்சத்திரங்கள் சேர்ந்து குறிப்பிட்ட சில உருவங்கள் போல் தோன்றுவதே நட்சத்திரக் கூட்டங்கள் அவர்கள் வாழ்வில் நடந்த சில நிகழ்ச்சிகள், விண்ணில் அவர்கள் பார்த்த நட்சத்திரக் கூட்டங்கள் அல்லது கிரகங்களின் சஞ்சாரத்தோடு தொடர்புடையவையாக அவர்களுக் குத் தோன்றியிருக்கக் கூடும். விண் ணில் உள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள், வால்நட்சத்திரங்கள் போன்றவை தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் சக்தி கொண்டவை என அவர்கள் நம்புவ தற்கு இத்தகைய தற்செயல் ஒற்றுமை நிகழ்வுகள் காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால் இந்த நம்பிக்கைகள் எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான புரிதலோ தொலைநோக்கி போன்ற சாதனங்களோ இல்லாத காலத்தில் - வானவியல் ஒரு அறிவியல் துறையாக பெருமள வுக்கு வளராத காலகட்டத்தில் - தோன் றியவை என்பதை நாம் நினைவில் அழுத்தமாகப் பதியவைத்துக்கொள் வது நல்லது.

முன்காலத்தில் வால் நட்சத்திரங்கள் தோன்றுவது மர்மமாக இருந்ததால் அவை பீதியைக் கிளப்பின. இன்று அவை எங்கிருந்து வருகின்றன, எங்கே செல்கின்றன என்ற விவரங்கள் நமக்குத் தெரிந்த ரகசியங்கள் ஆகிவிட்டதால் மர்ம முடிச்சுகளும் அகன்றுவிட்டன. விண்ணில் ஏவப்பட்ட கலங்கள் பல கிர கங்களின் அருகே சென்று கிரகங்களின் தன்மைகள் பற்றி ஆய்வுகளை நடத்தி விட்டன. சில கிரகங்களில் விண்கலங் கள் இறங்கியே கூட ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. சந்திரனில் மனி தர்களே இறங்கி நடை பயின்ற அதிசயம் கூட நிகழ்ந்துவிட்டது. காலம் காலமாக மனிதனின் கற்பனைக்கு வளம் சேர்த்த சந்திரனை இன்று மனித சக்தி தொட்டுப் பார்த்துவிட்டது. பூமி எந்தெந்த தனி மங்களால் ஆனதோ, ஏறக்குறைய அதே தனிமங்களால் ஆனவைதான் மற்ற கிரகங்கள் என்ற உண்மையும் விண்வெளி ஆய்வுகளால் தெளிவாகி விட்டது. பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதையும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் உண்மையான தன்மைகள் என்னவென்பதையும் அறிவியல் இன்று தெளிவாக விண்டுவைத்துவிட்டது. நட்சத்திரங்களில் சூரியனைத் தவிர மற்றவை பூமியிலிருந்து பல ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. அவ்வளவு தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் பூமியில் உள்ள மனிதர்களின் ‘தலைவிதி’யையோ, குணங்களையோ தீர்மானிக் கும் சக்தி கொண்டவை என நம்பு வதற்கு அறிவியல் அடிப்படை ஏதும் கிடையாது. வானத்தில் தொலைதூரத் தில் உள்ள ஒரு கிரகம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் (யீடிளவைiடிn) இருக்கும் காரணத் தால் அது பூமியில் உள்ள ஒரு தனிப் பட்ட மனிதரின் வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பதை சோதிடர்களால் அறிவியல் பூர்வமாக விளக்க முடிவ தில்லை. சோதிட சாஸ்திரத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்கு மேல் அவர்களால் விளக்கமளிக்க முடி யாது.

பேராசிரியர் கே. ராஜு

Thursday, April 19, 2012

சிறுநீரக மாற்று சிகிச்சை


சிறுநீரகங்கள் மனித உடலில் மிக முக்கியமான இரு உறுப்புகள். அவரைக்காய் வடிவத்தில் உள்ள இவை விலா எலுப்புக்கூட்டிற்குக் கீழ் முதுகெலும்புக்கு இருபக்கத் திலும் அமைந்திருக்கின்றன. இரத் தத்திலிருந்து கழிவுப் பொருள் களையும் நீரையும் அகற்றி சிறுநீர் வழியாக வெளியேற்றும் வேலை யை அவை செய்கின்றன. ஒரு வீட் டைக் கூட்டிப் பெருக்கிக் குப்பை களை அகற்றாவிட்டால் என்ன ஆகும்? சிறுநீரகம் இல்லை யெனில் உடலின் நிலையும் அது தான். ஒவ்வொரு நாளும் சுமார் 50 காலன் ரத்தத்தைச் சுத்தி கரித்து கழிவுகளை அவை பிரித் தெடுக்கின்றன. கழிவுகள் சிறுநீர்க் குழாய்கள் வழியாக சிறுநீர்ப்பை யை அடைகின்றன.

பின்னர் சிறு நீராக அவை வெளியேறுகின்றன. நீரிழிவு நோய், அதிக ரத்த அழுத்தம், புகை பிடித்தல், குடிப் பழக்கம் போன்ற காரணங்களால் சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாக நேரும். உயிர் வாழ்வதற்கு ஒரு சிறு நீரகமே போதுமானது. எனவே சிறு நீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியமான ஒருவரிடமிருந்து ஒரு சிறுநீரகத்தை எடுத்துப் பொருத்துவது சிறுநீரக மாற்று சிகிச்சை என அழைக்கப்படுகிறது.சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சிறுநீரக மாற்று சிகிச்சைக்குப் பெயர் பெற்றது. இந்த ஆண்டு மார்ச் 20 அன்று அங்கு 1000-வது தடவையாக இச் சிகிச்சை நடைபெற்றது. இந்தியா வில் இந்த சாதனையைச் செய்த முதல் அரசு மருத்துவமனை இந்த மருத்துவமனையே என்கிறார் மருத் துவமனையின் டீன் வி. கனகசபை.25 ஆண்டுகளுக்கு முன் 1987 ஜூலை 10 அன்று இந்த மருத்துவமனையின் முதல் சிறு நீரக மாற்று சிகிச்சையைச் செய் தவர் டாக்டர் எம்.ஏ. முத்துசேதுபதி. “25 ஆண்டுகளில் 1000 சிறுநீரக மாற்று சிகிச்சை நடந்திருப்பது ஒரு சாதனைதான். 1982-ல் ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் முதன்முதலாக இந்த சிகிச்சையை நாங்கள் செய்தோம். பிறகு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்ற லாகி வந்ததும் அந்த சிகிச்சையைத் தொடர்ந்தோம். 25 ஆண்டுகளுக்கு முன் மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொண்டவர்களில் சுமார் 80 சதம் பேருக்கு சிகிச்சைக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழக் கூடிய வாய்ப்பு இருந்தது. படிப்படி யாக இதில் முன்னேற்றம் ஏற்பட் டது. தமிழகத்தில் சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடை பெற்று வருவதற்குக் காரணம், சிகிச்சை செய்துகொண்டவர் களுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்புத் திறன் ஒடுக்க மருந்துகள் (iஅஅரnடிளரயீயீசநளளiடிn னசரபள) இலவசமாக அளிக்கப்பட்டதுதான்” என்கிறார் டாக்டர் முத்துசேதுபதி. “இன்று இந்த மருந்துகளின் விலை 10000 ரூபாயிலிருந்து 12000 ரூபாய் வரை ஆகிறது.

மாநில அரசு நோய் எதிர்ப்புத் திறன் சிகிச்சைக்கு 2 கோடி ரூபாயை ஒதுக்கியிருக் கிறது” என்கிறார் டாக்டர் கனக சபை. மரணமடைந்தவர்களின் சிறு நீரகத்தை எடுத்து நோயாளிகளுக் குப் பொருத்தும் சிகிச்சை (உயனயஎநச வசயளேயீடயவே) 1996-ல் முதன் முத லாக இங்கு நடைபெற்றாலும் 2008-ஆம் ஆண்டிலிருந்தே பரவ லாக நடைபெறத் தொடங்கியிருக்கிறது.உலக சிறுநீரக நாளாக மார்ச் 8 அனுசரிக்கப்படுகிறது. அன்று சென்னையில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் களும், சிறுநீரக தானம் செய்தவர் களும் மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொள்ள இருக்கும் நோயாளி களைச் சந்தித்து உரையாடினர். 17 ஆண்டுகளுக்கு முன் மாற்று சிறு நீரகம் பொருத்திக் கொண்ட ஒருவர் தன்னுடைய அனுபவங்களை மற்ற வர்களுடன் பகிர்ந்து கொண்டார். சிகிச்சை மேற்கொள்ள இருக்கும் நோயாளிகளுக்கு இந்த சந்திப்பு உற்சாகத்தையும் நம்பிக்கையை யும் அளித்தது. “சிகிச்சைக்குப் பிறகு 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளை நான் அறிவேன். நோய் எதிர்ப்புத் திறன் ஒடுக்க மருந்துகளின் விளைவாக ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பதுதான் சவாலாக இருக் கிறது” என்கிறார் டாக்டர் முத்து சேதுபதி.சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டவர்களுக்கு மாற்று சிறுநீர கமே புனர்வாழ்வு அளிக்கிறது. எனவே, இத்துறையில் உள்ள சவால்களைச் சந்தித்து நூற்றுக்கு நூறு வெற்றி அடைய எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துவோம்.

பேராசிரியர் கே. ராஜு
(உதவிய கட்டுரை : தி இந்துவில் திருமிகு ஆர். சுஜாதா எழுதியது)

Sunday, March 18, 2012

எண்ணெய் வித்துக்களிலிருந்து உயிரி எரிபொருள் அரசு ஊக்கப்படுத்துமா?




நாட்டின் எரிபொருள் தேவையை சமாளிக்க இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்தால் கடுமையான நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும். ஆகையால் உணவுக்கு பயன்படாத எண்ணெய் வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்தியாவின் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே, செல்கிறது. நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 70 விழுக்காட்டிற்கு மேல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மக்கள் தொகை பெருக்கம், நாட்டின் வாகனங்கள் பெருக்கம், அவசியமற்ற ஆடம்பரம் என நாட்டின் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவில் எரிபொருள் பயன்பாடு சுமார் 63 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்பட்டு வரும் நிலையற்ற தன்மை, தவறான பொருளாதார கொள்கை காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் விஷயத்தில் நம்நாடு நெருக்கடியை சந்திக்க வேண்டிவரும். ஏற்கனவே கச்சா எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் பெட்ரோல்-டீசலை உபயோகிப்பதால் ஏற்படும் பருவ நிலை மாற்றங்கள் சுற்றுச்சூழலை மிகவும் பாதிப்பதாக உள்ளது.

இத்தகைய சூழலில் கச்சா எண்ணெய் சார்ந்த எரிபொருளுக்கு மாற்றாக உயிரி எரிபொருளை உற்பத்தி செய்து பயன்படுத்துவதன் மூலம், நாட்டின் எரிபொருள் தேவையை சமாளிப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழலையும் பாதுகாக்க இயலும். உணவுக்கு பயன்படாத எண்ணெய் வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் எந்ததெந்த வித்துக்களில் இருந்து பெற முடியும் என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதில், உணவுக்கு பயன்படாத எண்ணெய் வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்பு வசதிகள் அதிகமாக இருக்கிறது; ஆனால் அதனை நாம் முழுமையாக பயன்படுத்தவில்லை; கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சதவிகிதமாவது இந்த உணவுக்கு பயன்பாடாத எண்ணெய்வித்துக்களில் இருந்து எடுக்கப்படும் உயிரி எரிபொருள் உற்பத்திக்கு கொடுத்தால், நமக்கான எரிபொருள் தேவையில் கணிசமான பகுதியை நாமே பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று கூறுகின்றனர்.குறிப்பாக காட்டாமணக்கு, புன்னை,இலுப்பை, மற்றும் புண்ணை மரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் மூலம் உயிரி எரிபொருள் உற்பத்தி செய்ய இயலும் என்பது வெற்றிகரமாக கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.கச்சா எண்ணெய் மூலம் பெறப்படும் எரிபொருளை விட உயிரி எரிபொருள் எவ்விதத்திலும் குறைந்தது இல்லை என்பதும், குறிப்பாக சுற்றுச்சூழலுக்குஎவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதும் ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற நீலகிரி மலை ரயில் இந்த உயிரி எரிபொருள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.
உணவுக்கு பயன்படாத எண்ணெய்வித்துக்கள் என்று கண்டறியப்பட்டுள்ள இந்த மரங்களை வளர்ப்பதற்கு அதிக அளவில் தண்ணீர் தேவையில்லை என்பது கூடுதல் வசதி ஆகும். மேலும் தொடர் கவனிப்பும் தேவைப்படாது. அரசு சரியாக திட்டமிட்டு செயல்படுத்த ஆரம்பித்தால் மிகப்பெரிய பலனை அடைய முடியும். இந்தியாவில் பயனற்ற நிலையில் பல லட்சக்கணக்கான ஹெக்டேர் தரிசு நிலங்கள் இருக்கிறது. அந்த இடங்களில் புங்கன், கட்டாமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களை பயிரிட்டு பயன்படுத்த துவங்கலாம். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். கூடுதலாக தரிசு நிலங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.

 இதன் மூலம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். இதுபற்றி மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் துரைராசு ஐ.எப்.எஸ். யிடம் கேட்டபோது:உணவுக்கு பயன்படாத உயிரி எரிபொருள் உற்பத்திக்கு காட்டாமணக்கு, புங்கன் உள்ளிட்ட 10 மர வித்துக்கள் மூலப்பொருட்களாக உள்ளன.

இந்த மாவித்துகள் உற்பத்தியில் கன்று நடுவது முதல் வளர்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது வரை உள்ள பிரச்சனைகளை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மரம் மற்றும் விதைகள் பற்றிய விபரங்களும், அதன் உயர்ந்த பலன் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்லூரி மாணவ- மாணவியருக்கு இது குறித்த சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்ததப்படுகிறது. இந்த முகாம்களில் உயிரி எரிபொருளின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரி எரிபொருளுக்கான முலப்பொருட்கள் தயாரிப்பு முறைகள் விரிவாக விளக்கப்படுகிறது. மேலும் உயிரி எரிசக்தியின் மர வளர்ப்பு பற்றி மரப்பண்ணைகளுக்கு நேரிடையாக அழைத்துச் சென்று அவர்களின் சந்தேகங்களை நீக்குவதோடு, சிறந்த ஆலோசனைகளையும் பெறுகிறோம் என்றார். மின் சக்தியின் உற்பத்தியை எடுத்துக் கொண்டால் நிலக்கரி மூலம், காற்றின் மூலம், நீரின் மூலம், சூரிய ஒளியின் மூலம், அணுசக்தி மூலம் என பல முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பல வகைகளில் தயாரிக்கப்படும் மின்சாரமே இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் பற்றாக்குறையாக நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் வகையில் தடைப்பட்டு வருகிறது.

 இதே நிலைதான் எரிசக்திக்கும். இறக்குமதியை மட்டுமே நம்பிக் கொண்டு அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொள்ளாமல், “ உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்த்துவிட்டது. அதனால் இங்கும்பெட்ரோல் - டீசல் விலையை தாறுமாறாக உயர்த்துவது தவிர்க்க இயலாதது” என விலையை உயர்த்துவதையேகொள்கையாக கொண்டிராமல், உணவுக்கு பயன்படாத எண்ணெய்வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் உற்பத்தி முறையை ஊக்கப்படுத்த அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் எரிபொருளின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்தும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட முடியும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

-இரா.சரவணபாபு

Sunday, February 19, 2012

புதுவை அறிவியல் இயக்கத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி


தானே புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு புதுவை அறிவியல் இயக்கத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரியில் கடந்த டிசம்பர் 30ஆம்தேதி தானே புயலால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.அதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் அடங்கிய இடுபொருட்கள், மாணவர்களுக்கு புத்தகபைகள், நோட்டு புத்தகங்கள், பெண்கள் வீட்டு தோட்டத்தில் காய்கறிகள் பயிரிடுவதற்கு விதைகள் மற்றும் இடுபொருட்கள் ஆகியவை  வழங்கும் நிகழ்ச்சி ரெட்டியார்பாளையம், பாகூர், உச்சிமேடு கிராமம் ஆகிய பகுதியில் நடைபெற்றது.

 இந்நிகழ்சியில் அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் S.சேகர், துனைதலைவர் முனைவர் T. பரசுராமன் நிர்வாகிகள் R. தட்சணாமூர்த்தி, A. ஹேமாவதி, T.P.ரகுநாத், M. சுதர்சனன், P. ரவிச்சந்திரன், R. ரமேஷ், K. விஜயமூர்த்தி, சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் செயலாளர் டி.சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

இதேப்போல் கடந்த ஜனவரி மாதத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, சமையல்என்ணெய், போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

Saturday, February 18, 2012

அறிவியல் வானில் பெண் நட்சத்திரங்கள்

 பெண் என்பவர் ஒரு தாய், ஒரு மகள், ஒரு சகோதரி, ஒரு மனைவி. குடும்பம் என்ற அமைப்பின் ஆணிவேராக இருப்பதும் பெண்தான். அதே சமயம், பொது வாழ்க்கையில் ஆண்களோடு இணைந்து பொறியியல், மருத்துவம், கல்வி, அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் அவர்கள் தங்கள் முத்திரையை அழுத்தமாகப் பதித்தும் வருகின்றனர். தாங்கும் சக்தி அதிகம் தேவைப்படும் மிகக் கடினமான பயிற்சிகள் கொண்ட விண்வெளிப் பயணங்களிலும் கூட அவர்கள் சிறந்த சாதனைகளைச் செய்து வருகின்றனர். 1950-களில் அன்றைய சோவியத் யூனியன் விண் வெளியில் ஸ்புட்னிக் என்ற செயற்கைக் கோளைச் செலுத்திய பிறகு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புது யுகம் பிறந்தது.

 யூரி ககாரின் விண் வெளியில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்து சிறிது காலம் ஆனவுடனேயே வாலெண்டினா டெரஸ் கோவா அந்த சாதனையைத் தொடர்ந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். அதற்குப் பிறகு மேலும் பல பெண்கள் விண் வெளியில் பயணிக்க அது ஒரு தொடக்கமாக அமைந்தது. 
 
2011 ஜனவரி நிலவரப்படி 282 விண் வெளிப் பயணங்கள் மூலமாக 520 பேர் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்தவர்கள். அதில் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜப் பான், கொரியா, பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து சென்ற 56 பேர் பெண்கள். 

இந்தியாவிலும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்குப் பிறகு ஏவுகணைத் திட்டத்தின் இயக்குநராக பொறுப்பேற்றிருப்பது 48 வயதான டெஸ்ஸி தாமஸ் என்ற பெண்தான். சென்ற ஆண்டு நவம் பர் 15 அன்று ஒரிஸா கடற்கரையின் பாலசோர் சோதனைத்தளத்திலிருந்து அக்னி - ஐஏ ஏவுகணையை விண்ணில் செலுத்தி அவரும் அவரது குழுவினரும் சாதனை படைத்தனர்.

 3000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அந்த ஏவுகணை பழைய சாதனை களை முறியடித்தது. இந்தியாவின் பிரபலமான பெண் விஞ்ஞானியாக டெஸ்ஸி தாமஸ் கருதப்படுகிறார். ஆனால் அதை வைத்து அறிவியல் துறையில் பெண்களுக்குரிய அங்கீ காரம் கிடைத்துவிட்டதாக நாம் மகிழ்ச்சியடைந்துவிட முடியாது. எப்படி ஒரு பிரதிபா பாட்டீலையோ ஒரு மீரா குமாரையோ வைத்து அர சியலில் பெண்களுக்குரிய இடம் கிடைத்து விட்டதாகக் கருதமுடிய தோ அது போன்றதுதான் இது.

பெண் விஞ்ஞானிகளில் மேரி கியூரியைப் பற்றி பலருக்கும் தெரியும். அவர்களுக்குக் கூட அவர் இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற வர் என்ற தகவல் தெரியுமாவெனத் தெரியவில்லை. 1963-ல் இயற்பிய லுக்காக நோபல் பரிசு பெற்ற மரியா கோப்பெர்ட்-மேயர், 1964-ல் வேதியியலுக்காக நோபல் பரிசு பெற்ற டோரோதி ஹாட்கின்,1986-ல் மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற ரிட்டா லெவி-மாண்டேசினி போன்ற பெண் விஞ்ஞானிகளையோ, பெண் என்ற காரணத்தினா லேயே நோபல் பரிசு பெற வாய்ப் பில்லாமல் போய்விட்ட ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின் (1920-1958), லைஸே மேட்னர் (1878-1968), சியன்-ஷியுங் வு (1912- 1997), ஜோசலின் பெல் பர்னெல் (1943- ) போன்ற பெண் விஞ்ஞானிகளையோ எத்தனை பேருக்குத் தெரியும்?

பல கலாச்சார, சமூகத் தடைகளின் காரணமாக நாட்டில் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. கலை, சமூக விஞ்ஞானம் போன்ற மென்மையான துறைகளுக்குத்தான் பெண்கள் ஏற்றவர்கள் என்ற கருத்து இன்னமும் பரவலாக இருக் கிறது. அடிப்படையில் பெண்கள் வீட்டுப் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர். இது ஆண்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, பல பெண்கள் தங்களுக்காக வகுத்துக் கொண்டுள்ள எல்லையும் அதுதான்.

பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது பற்றி சமூகவியலாளர்கள் பல ஆண்டுகளாகவே கவலை தெரிவித்து வருகின்றனர். மற்ற எல்லாத் துறைகளையும் போலவே அறிவியல் துறையிலும் சமூகத்தின் பார்வைகள், சமூக நிர்ப்பந்தங்கள், பாலினப் பாகுபாடுகள் போன்ற காரணங்களால் பெண்கள் பிரச்சனை களைச் சந்திக்கின்றனர். மனித வளத்தின் கணிசமான பகுதி சரியான முறையில் பயன்படாமலே வீணாவதை நாம் உணர வேண்டும். சமூகம் பெண்களைப் பார்க்கும் பார்வைகளில் அடிப்படையான மாற்றங்கள் வரவேண்டும். பெண்கள் அறிவியல் துறையில் நியமனம் பெறவும் சாதனைகள் படைக்கவும் உள்ள தடைகளை அகற்ற வேண்டியது மிகமிக அவசியம் என்பதில் சந்தேகம் இல்லை.

Sunday, February 12, 2012

முட்களாக மாற்றப்படும் பூக்கள்



தமிழ்சமூகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டன. ஆனால் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறை யிலேயே ஆசிரியை ஒருவரை ஒன்பதாவது வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இது ஒரு தனிமனித விரோத குரோதம் சார்ந்த குற்றம் அல்ல. இந்தப் படுகொலை இன்றைய சமூக அமைப்பு, கல்விச்சூழல், பாடத்திட்டம், ஆசிரியர்- மாணவர் உறவு, பெற்றோர் - பிள்ளைகள் உறவு என பல்வேறு தளங்களில் ஆயிரமாயிரம் கேள்விகளை எழுப்புகிறது. 

கொலை செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி கனிவானவர். அதேநேரத்தில் கண்டிப்பானவர் என்றும் அனைத்து மாணவர்களிடமும் அன்போடு பழகக்கூடியவர் என்றும் சக ஆசிரியைகள் கூறியுள்ளனர். கொலை செய்த மாணவன் நல்ல பழக்கவழக்கங்களைக் கொண் டிருந்தவன்தான்.

குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட வேண்டியது இன்றைய பாடத்திட்டமும்தான். ஒரே மாதிரியான கல்விமுறை, பாடத்திட்டம் வேண்டும் என்பதற்காக இந்திய மாணவர் சங்கம் நீண்ட நெடுங்காலமாகப் போராடி வருகிறது. சமூக பொறுப்புணர்வுள்ள ஆசிரியர் சங்கங்களும் இதே கோரிக்கையை முன்வைக்கின்றன. இதன் ஒரு பகுதிதான் சமச்சீர்கல்வி. 

ஆனால், நவீன தாராளமயமாக்கல் சூழலில் கல்வி வணிகமயமாக்கப்பட்டுவிட்டது. எந்த அளவுக்கு கனமான புத்தகங்களை மாணவர்கள் சுமந்து செல்கிறார்களோ அதுவே அறிவின் அடையாளம் என்று சித்தரிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் மாணவர்களை கசக்கிப்பிழி கின்றன. மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விகிதம் மட்டும் அளவுகோலாக முன்வைக்கப்படுகிறது. இதே சித்ரவதைக்கு ஆசிரிய சமூகமும் உள் ளாக்கப்படுகிறது. 

இதனால் ஏற்பட்ட மன அழுத்தம்தான் ஒரு கள்ளமறியா பிஞ்சை கொலைகாரனாக மாற்றியுள்ளது. இந்தி மொழிப்பாடம் தமக்கு கொஞ்சம் கூட புரியவில்லை என்றும், இது குறித்து ஆசி ரியை தொடர்ந்து கண்டித்ததால் கொலை செய் யும் முடிவுக்கு வந்ததாகவும் அந்த மாணவன் கூறியுள்ளான். ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தாய்மொழிவழிக் கல்விக்குப் பதிலாக பல மொழிகளை கற்பிப்பதாக தனியார் பள்ளிகள் விரிக்கும் வர்த்தக வலையில் விழுந்ததால் ஏற் பட்ட விபரீத விளைவுகளில் இதுவும் ஒன்று.

மறுபுறத்தில், இளைய தலைமுறையை நஞ் சாக மாற்றுவதில் திரைப்படம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் முக்கியப் பங்கு வகிக் கின்றன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சமூகப் பொறுப்பற்ற பொறுக்கிகளாகவே ஊடகங் கள் சித்தரிக்கின்றன. அண்மையில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய கொலைவெறி பாடல் இதற்கு ஒரு உதாரணம்.

மறுபுறத்தில் ஆசிரியர் - மாணவர் உறவில் பாடத்திட்டத்தின் சுமை இயல்பான உறவை கெடுத்து வைத்திருக்கிறது. பெற்றோர் - பிள்ளைகள் உறவும் சீரானதாக இல்லை. மதிப்பெண் மட்டுமே ஒரே தகுதியாகக் கருதும் அள வுக்கு பெற்றோர்களை மாற்றியுள்ளது இன்றைய சமூகக் கல்விமுறை. 

சென்னைப் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் இன்றைய சமூகத்திற்கு ஒரு பாடம். இந்தக் கோணத்தில் இதை உணர்ந்து, தீர்வு காண்பதே எதிர்காலத்தில் இளம் கொலையாளி உருவாவதைத் தடுக்கும்.

Friday, January 20, 2012

சூரிய ஆற்றல் தரப்போகும் 20,000 மெகாவாட் மின்சாரம்



சூரிய ஆற்றல் சுற்றுப்புறத்திற்கு எந்தக் கேட்டினையும் விளைவிக்காத சுத்தமான ஆற்றல்.

வடமேற்கு இந்தியாவில் 63 ஏக்கர் நிலத்தில் 36,000 சூரியத் தகடுகளை  வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் மிகப்பெரும் திட்டத்தை அசூர் பவர் என்ற நிறுவனம் நிறைவேற்றி வருகிறது. வறண்ட பகுதியில் தகடுகள் நிறுவப்பட்டுள்ளதால் ஐந்து நாட்களுக்கொரு முறை அவற்றின் மீது படியும் தூசுகளைத் துடைத்து சுத்தப்படுத்த வேண்டியுள்ளது. கடுமையான மின்பற்றாக்குறை நிலவும் இந்தியாவில் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதை நவீனப் படுத்தி, நிலக்கரியைப் பயன் படுத்தித் தயாரிக்கப்படும் மின் சாரத்தின் அளவைப் படிப்படியாகக் குறைப்பதுதான் திட்டத்தின் நோக்கம்.

2020-க்குள் 2000 மெகாவாட்

இதுவரை 140 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை மட்டுமே இந்தியா பயன்படுத்தி வருகிறது. இதைக் கொண்டு 50,000 மக்கள் தொகை உள்ள ஒரு நகரத்தின் மின்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தயாரிக்கப்படும் சூரிய ஆற்றல் மின்சாரத்தின் அளவு சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. 2020-க்குள் இந்த அளவை 20,000 மெகா வாட் ஆக உயர்த்த வேண்டும் என்ற இலக்கினை அப்போது இந்திய அரசு நிர்ணயித்தது. பல ஆய்வாளர்கள் இந்த இலக் கினை எட்டுவது சாத்தியமல்ல என்று கருதினர். ஆனால் இன்று அவர்கள் தங்கள் கருத்தினை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை தோன்றியிருக்கிறது. 2020க்கு சில ஆண்டுகள் முன்ன தாகவே 20,000 மெகாவாட் இலக்கை எட்டிவிட முடியும் என தற்போது ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக அள வில் சூரியத் தகடுகளின் விலை குறைந்ததால்தான் இது சாத்திய மாகியிருக்கிறது. சன்டெக் பவர், யிங்க்லி கிரீன் எனர்ஜி போன்ற சீன நிறுவனங்கள் சூரியத் தகடு களின் உற்பத்தியை அதிகரித்த தால், உலக விலை 30-லிருந்து 40 சதம் வரை குறைந்தது. சீனா, அமெரிக்கா, தைவான், ஐரோப் பிய நாடுகளிலிருந்து இந்திய நிறு வனங்கள் தகடுகளை வர வழைத் துக் கொள்கின்றன. அரசு மானி யம் கொடுத்து ஊக்குவிப்ப தாலும் சூரியத் தகடுகளின் விலை குறைந்திருப்பதாலும் அசூர் போன்ற பல நிறுவனங்கள் இன்று வடமேற்கு இந்தியச் சமவெளிகளில் களம் இறங்கி யுள்ளன. 2000 பேர் வசிக்கும் சிறு கிராமங்களில் கூட சூரிய சக்தித் தகடுகள் மின்னும் காட் சியைப் பார்க்க முடிகிறது.

சூரியசக்தி மின்தயாரிப்பில் ஐரோப்பிய நாடுகளோடு ஒப் பிடும்போது இந்தியா பின்தங் கியே இருக்கிறது. உதாரணமாக, 2010 இறுதியில் ஜெர்மனி 17,000 மெகாவாட் சூரியசக்தி மின் சாரத்தை உற்பத்தி செய்யும் திற னுடன் இருந்தது. ஒரு வருடத் தில் 300 நாட்களில் சூரிய ஒளி தாராளமாகக் கிடைக்கும் நம் நாட்டில் அதைவிட அதிகமாக சூரியசக்தி மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.

தயாரிப்புச் செலவு குறையும்

“இந்தியாவில் உள்ள மின் ஆலைகளில் பெரும்பாலானவை நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையங்களே. அங்கு ஒரு யூனிட்டிற்கு 4 ரூபாய் செலவில் மின்சாரம் தயாரிக் கப்படுகிறது. ஏலத்தில் அது 8-லிருந்து 10 ரூபாய் வரை எடுக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் ஒரு யூனிட் மின்சாரத்திற்குக் கொடுக்கும் விலையும் அதுதான். பெட்ரோலியப் பொருட்களைப் பயன்படுத்தும் ஜெனரேட்டர் கள் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 10 ரூபாய் செலவா கிறது. தற்போது சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் செலவு இதோடு ஒப்பிடும் நிலையில் உள்ளது. சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான தேவை அதிகரித்து வருவதால், ஒவ்வொரு மாதமும் சூரியசக்தி மின்சாரத்தின் உற்பத்திச் செலவு குறைந்து கொண்டே வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் மற்ற வகைகளில் தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு ஆகும் செலவிலேயே சூரியசக்தி மின்சாரத்தையும் தயாரிக்க முடியும். தொடக் கத்தில் நிறுவனங்களிடையே கடுமையான போட்டி இருக் கிறது. ஆனால் நாளாவட்டத் தில் கொள்ளை லாபமே நோக்க மாகக் கொண்ட நிறுவனங்கள் காணாமல் போய்விடும். இத் துறையில் உண்மையான ஈடு பாடு உள்ள நிறுவனங்கள் மட்டுமே நிலைத்து நிற்கும்” என்கிறார் அசூர் பவர் தலைமை மேலாளர் இன்டர்ப்ரீட் வாத்வா.

பேராசிரியர் கே. ராஜு
(உதவிய கட்டுரை : ‘தி இந்து’வில் விகாஸ் பஜாஜ் எழுதியது)

Wednesday, January 18, 2012

தென்னிந்திய அளவிலான அறிவியல் செய்முறை பணியரங்கு


புதுவை அறிவியல் இயக்கம் மற்றும் புதுதில்லி விஞ்ஞான் பிரச்சார் சார்பில் புதுச்சேரி வெற்றி வெங்கடேஷ்வரா ஆசிரியர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இப் பணியரங்கை, விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் நிர்வாகி டி.வி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார். புதுவை அறிவியல் இயக்கத் தலைவர் எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் எஸ்.சேகர், துணைத் தலைவர்கள் ஏ.ஹேமாவதி, ஆர்.தட்சிணாமூர்த்தி, த.பரசுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒடிஷா பாரீஸ் செüத்-11 பல்கலைக்கழக பேராசிரியர் பியர் பான்த்ஸ் பயிற்சி அளித்தார்.

இதில், புதுச்சேரி, தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 30 அறிவியல் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இப் பணியரங்கு 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

A series of Innovative Science Experiments Workshops with Prof. Pierre Fontes from France started yesterday at Pondicherry (17-19 Jan) followed by one in Bhopal (21-23 Jan) and then in Mandi (3-6 February) in collaboration with Vigyan Prasar, Department of Science & Technology, Govt. of India.
 
The Pondicherry workshop is being attended by about 25 participants from Andhrapradesh, Karnataka, Tamilnadu, Kerala and Pondicherry.  Prof.Pierre Fontes is a distinguished Nuclear Physicist and Science Communicator from the University of Paris, South 11, Orsay, France (retired) and is currently in India to conduct three workshops to train science teachers and activists on innovative, low cost experiments in science to make science teaching interesting and fun.
 
The programme was inaugurated yesterday at the Vettri Venkateswara Institute (Behind Hotel Mass) with Dr.T.Parasuraman, Vice President of PSF presiding over the function, Mr.T.P.Raghunath, Programme Coordinator welcoming the participants and explaining the background of the programme. The Inaugural talk was delivered by Dr.T.V.Venkateswaran of Vigyan Prasar, New Delhi. This was followed by an introductory speach by Dr.Fontes who started his experiments session with the participants.
 
The programme will continue for two more days. This is being followed by a Workshop at Bhopal Science Centre, Bhopal on 21 to 23 January 2012 and another one at Mandi (Himachal Pradesh). In total about 80 to 100 teachers will be trained on these experiments which require very low cost, kitchen ware materials only but with wonderful results and no less interesting than a fully equipped science lab. And thus, with schools which does not a full fledged science lab can adopt these experiments into their curriculum easily and children too can try it out at their homes.
 
Pondicherry Science Forum in collaboration with the Vigyan Prasar is also planning to bring out a manual for science experiments with which the contents of the training can be disseminated to all the schools in the country as well.



Wednesday, January 11, 2012

குழந்தைகளின் கல்விக்கு வெறும் 1 விழுக்காடுதானா?

குழந்தைகளின் அடிப்படைக் கல்வி, உலக அவையத்து இந்தியா முந்தியிருக்க மிக மிக முக்கியத் தேவை. ஆனால், இந்தியாவில் மிகவும் பிந்தியிருப்பது குழந்தைகளின் கல்விக்கு அளிக் கப்படும் முக்கியத்துவம்தான். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்காக ஒதுக்கப்படும் அரசு செலவினம் ஒருபோதும் அதிகபட்சமாக 4.3 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்ததில்லை. இது உயர்கல்வி உள்ளிட்ட அனைத்துத்துறைகளுக்குமான மொத்தத் தொகை. அடிப்படையான தொடக்கக்கல்விக் கான நிதி மிகமிகக் குறைவு.

இந்தப் பின்னணியில் குழந்தைகளின் கல் விக்காக என மத்திய-மாநில அரசுகள் ஒதுக்கு கிற நிதியிலும் கூட, நேரடியாக அவர்களுடைய கல்விக்கு என ஒதுக்கப்படுவது வெறும் 6 விழுக் காடுதான் என்று அண்மையில் மேற்கொள்ளப் பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பாடப்புத்தகங் கள், சீருடைகள், பள்ளியிலிருந்து பாதியில் விலகுகிற குழந்தைகளின் பிரச்சனைகள் இவற் றுக்காக ஒதுக்கப்படுகிற நிதி ஏற்பாடுகள் அந்த 6 விழுக்காட்டிற்குள் அடங்குகிறது. 78 விழுக் காடு வரையில் ஆசிரியர்களின் ஊதியத்திற்கும், 14 விழுக்காடு நிதி பள்ளிகளின் உள்கட்டுமான செலவுகளுக்காகவும் செல்கின்றன. கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு ஒதுக்கப்படும் நிதியோ வெறும் 1 விழுக்காடுதான்!

2009 - 2010 கல்வியாண்டுக் கட்டத்தில் பல் வேறு மாநிலங்களின் பட்ஜெட்டுகளில் தொடக் கக் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிய அந்த அறிக்கை, இந்த ஒதுக்கீடுகளின் உண்மையான இலக்காகிய குழந்தைகள் எந்த அளவுக்குப் பயனடைந்திருக்கிறார்கள் என ஆராய்கிறது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாநிலங் களில், தொடக்கக்கல்விக்கான நிதி ஒதுக்கீடு, பணக்கணக்கின்படி கணிசமாக அதிகரிக்கப் பட்டிருக்கிறது. 2007-08ம் ஆண்டில் ரூ.68,710 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2009-10ல் அது ரூ.97,255 கோடியாக உயர்த்தப்பட்டது. மாநிலத் துக்கு மாநிலம் மாறுபட்ட இதில் சில வேறுபாடு கள் இருக்கின்றன என்றாலும், ஒட்டுமொத்த மாகப் பார்க்கிறபோது குழந்தைகளின் நேரடிக் கல்விக்கு மிகச் சொற்பமான தொகைதான் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆசிரியர்களின் ஊதியம் அவர்களது நெடும் போராட்டத்தின் பலனாகக் கிடைத்திருப்பது. அதே போல் கூரையில்லாப் பள்ளிக்கூடங்கள் இன்னும் தொடர்கிற நிலையில் உள்கட்டுமானங் களுக்காக, இன்னும் பல மடங்கு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எதற்காக? குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைத்தாக வேண்டும் என்பதற் காகத்தானே? அதற்கான நேரடி நிதியை 1 விழுக்காடு அளவுக்குக் குறைத்துவிட்டு, மற்ற செலவினங்களை மட்டும் அதிகரிப்பதால் என்ன பயன்? ஆசிரியர்களுக்கான நிதி ஒதுக் கீடு குறைவாக உள்ள மாநிலங்களும் இருக்கின் றன. அதற்குக் காரணம் நிரந்தர ஆசிரியர்களுக்கு பதிலாக, கணிசமான எண்ணிக்கையில் ஒப் பந்த ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் நியமிக் கப்பட்டிருப்பதுதான்!

கட்டாய இலவசக் கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு குழந்தை களுக்கு நேரடியாக பலனளிக்கும் நிதி குறை வாக இருப்பது ஒருவகையில் அந்தச் சட்டத் தையே மீறுவதாகிவிடும். வசதியுள்ளவர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க, அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கான தரமான கல்வி உரிமையை மறுப்பதாகிவிடும். கல்வியில் ஏற்றத்தாழ்வை ஒழிக்க, போதுமான நிதி ஒதுக்கீட்டிற்கான போராட்டம் வலுப்பெற வேண்டியதன் அவசியத் தைத்தான் இந்த ஆய்வு புலப்படுத்துகிறது.