Wednesday, January 11, 2012

குழந்தைகளின் கல்விக்கு வெறும் 1 விழுக்காடுதானா?

குழந்தைகளின் அடிப்படைக் கல்வி, உலக அவையத்து இந்தியா முந்தியிருக்க மிக மிக முக்கியத் தேவை. ஆனால், இந்தியாவில் மிகவும் பிந்தியிருப்பது குழந்தைகளின் கல்விக்கு அளிக் கப்படும் முக்கியத்துவம்தான். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்காக ஒதுக்கப்படும் அரசு செலவினம் ஒருபோதும் அதிகபட்சமாக 4.3 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்ததில்லை. இது உயர்கல்வி உள்ளிட்ட அனைத்துத்துறைகளுக்குமான மொத்தத் தொகை. அடிப்படையான தொடக்கக்கல்விக் கான நிதி மிகமிகக் குறைவு.

இந்தப் பின்னணியில் குழந்தைகளின் கல் விக்காக என மத்திய-மாநில அரசுகள் ஒதுக்கு கிற நிதியிலும் கூட, நேரடியாக அவர்களுடைய கல்விக்கு என ஒதுக்கப்படுவது வெறும் 6 விழுக் காடுதான் என்று அண்மையில் மேற்கொள்ளப் பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பாடப்புத்தகங் கள், சீருடைகள், பள்ளியிலிருந்து பாதியில் விலகுகிற குழந்தைகளின் பிரச்சனைகள் இவற் றுக்காக ஒதுக்கப்படுகிற நிதி ஏற்பாடுகள் அந்த 6 விழுக்காட்டிற்குள் அடங்குகிறது. 78 விழுக் காடு வரையில் ஆசிரியர்களின் ஊதியத்திற்கும், 14 விழுக்காடு நிதி பள்ளிகளின் உள்கட்டுமான செலவுகளுக்காகவும் செல்கின்றன. கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு ஒதுக்கப்படும் நிதியோ வெறும் 1 விழுக்காடுதான்!

2009 - 2010 கல்வியாண்டுக் கட்டத்தில் பல் வேறு மாநிலங்களின் பட்ஜெட்டுகளில் தொடக் கக் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிய அந்த அறிக்கை, இந்த ஒதுக்கீடுகளின் உண்மையான இலக்காகிய குழந்தைகள் எந்த அளவுக்குப் பயனடைந்திருக்கிறார்கள் என ஆராய்கிறது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாநிலங் களில், தொடக்கக்கல்விக்கான நிதி ஒதுக்கீடு, பணக்கணக்கின்படி கணிசமாக அதிகரிக்கப் பட்டிருக்கிறது. 2007-08ம் ஆண்டில் ரூ.68,710 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2009-10ல் அது ரூ.97,255 கோடியாக உயர்த்தப்பட்டது. மாநிலத் துக்கு மாநிலம் மாறுபட்ட இதில் சில வேறுபாடு கள் இருக்கின்றன என்றாலும், ஒட்டுமொத்த மாகப் பார்க்கிறபோது குழந்தைகளின் நேரடிக் கல்விக்கு மிகச் சொற்பமான தொகைதான் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆசிரியர்களின் ஊதியம் அவர்களது நெடும் போராட்டத்தின் பலனாகக் கிடைத்திருப்பது. அதே போல் கூரையில்லாப் பள்ளிக்கூடங்கள் இன்னும் தொடர்கிற நிலையில் உள்கட்டுமானங் களுக்காக, இன்னும் பல மடங்கு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எதற்காக? குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைத்தாக வேண்டும் என்பதற் காகத்தானே? அதற்கான நேரடி நிதியை 1 விழுக்காடு அளவுக்குக் குறைத்துவிட்டு, மற்ற செலவினங்களை மட்டும் அதிகரிப்பதால் என்ன பயன்? ஆசிரியர்களுக்கான நிதி ஒதுக் கீடு குறைவாக உள்ள மாநிலங்களும் இருக்கின் றன. அதற்குக் காரணம் நிரந்தர ஆசிரியர்களுக்கு பதிலாக, கணிசமான எண்ணிக்கையில் ஒப் பந்த ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் நியமிக் கப்பட்டிருப்பதுதான்!

கட்டாய இலவசக் கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு குழந்தை களுக்கு நேரடியாக பலனளிக்கும் நிதி குறை வாக இருப்பது ஒருவகையில் அந்தச் சட்டத் தையே மீறுவதாகிவிடும். வசதியுள்ளவர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க, அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கான தரமான கல்வி உரிமையை மறுப்பதாகிவிடும். கல்வியில் ஏற்றத்தாழ்வை ஒழிக்க, போதுமான நிதி ஒதுக்கீட்டிற்கான போராட்டம் வலுப்பெற வேண்டியதன் அவசியத் தைத்தான் இந்த ஆய்வு புலப்படுத்துகிறது.

No comments: