Thursday, May 17, 2012

அறியாமையும் அச்சமுமே சோதிடத்திற்கு அடித்தளம்


அறிவியல் மனநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்கே சோதிடம் எதிரானது. ஆனால் நம் நாட்டின் பெரும் பாலான மக்களுக்கு சோதிடமே உந்துசக்தியாக இருக்கிறது. படிப்பறி வற்றவர்கள்தான் இந்த மோகத்திற்கு பலியாவார்கள் என்பதும் இல்லை. படித்தவர்களை சோதிட அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கக்கூடியதாக அவர்கள் படிக்கும் படிப்பு இல்லை. மேலைநாட்டு சோதிடமாக இருந்தா லும் சரி, இந்திய சோதிடமாக இருந்தாலும் சரி.. அதில் அறிவியலுக்குப் பொருந்திவரக் கூடிய தன்மைகள் அறவே கிடையாது. மனிதர்களின் அறியாமை மற்றும் அச்சம் இரண்டின் விளைவாக உருவானதே சோதிடம் என்று சொல்வது மிகையாகாது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் வானத்தைக் கூர்ந்து பார்த்து சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள் என்பது உண்மை.

ஆனால் அவர்கள் கண்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் அவர்களால் அறிவியல் விளக்கம் சொல்ல இயலவில்லை. இரவு வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களின் வடிவ அமைப்புகள் மாறுவது, சந்திரனின் வளர்பிறை தேய்பிறைகள், நட்சத்திரங்களைப் போன்று தோற்றமளிக்கும் கிரகங்களின் சஞ்சாரங்கள், எங்கிருந்தோ தோன்றி பிறகு மறையும் வால்நட்சத்திரங்கள் போன்ற விண்வெளி நிகழ்வுகள் பற்றி சரியான விளக்கம் அளிக்கும் அள வுக்கு அன்றைய அறிவியல் வளர்ந் திருக்கவில்லை. ஆதிகால மனிதர் களுக்கு இவை எல்லாமே அதிசயங் களாகத் தோன்றியிருக்க வேண்டும். சில பிரகாசமான நட்சத்திரங்கள் சேர்ந்து குறிப்பிட்ட சில உருவங்கள் போல் தோன்றுவதே நட்சத்திரக் கூட்டங்கள் அவர்கள் வாழ்வில் நடந்த சில நிகழ்ச்சிகள், விண்ணில் அவர்கள் பார்த்த நட்சத்திரக் கூட்டங்கள் அல்லது கிரகங்களின் சஞ்சாரத்தோடு தொடர்புடையவையாக அவர்களுக் குத் தோன்றியிருக்கக் கூடும். விண் ணில் உள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள், வால்நட்சத்திரங்கள் போன்றவை தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் சக்தி கொண்டவை என அவர்கள் நம்புவ தற்கு இத்தகைய தற்செயல் ஒற்றுமை நிகழ்வுகள் காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால் இந்த நம்பிக்கைகள் எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான புரிதலோ தொலைநோக்கி போன்ற சாதனங்களோ இல்லாத காலத்தில் - வானவியல் ஒரு அறிவியல் துறையாக பெருமள வுக்கு வளராத காலகட்டத்தில் - தோன் றியவை என்பதை நாம் நினைவில் அழுத்தமாகப் பதியவைத்துக்கொள் வது நல்லது.

முன்காலத்தில் வால் நட்சத்திரங்கள் தோன்றுவது மர்மமாக இருந்ததால் அவை பீதியைக் கிளப்பின. இன்று அவை எங்கிருந்து வருகின்றன, எங்கே செல்கின்றன என்ற விவரங்கள் நமக்குத் தெரிந்த ரகசியங்கள் ஆகிவிட்டதால் மர்ம முடிச்சுகளும் அகன்றுவிட்டன. விண்ணில் ஏவப்பட்ட கலங்கள் பல கிர கங்களின் அருகே சென்று கிரகங்களின் தன்மைகள் பற்றி ஆய்வுகளை நடத்தி விட்டன. சில கிரகங்களில் விண்கலங் கள் இறங்கியே கூட ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. சந்திரனில் மனி தர்களே இறங்கி நடை பயின்ற அதிசயம் கூட நிகழ்ந்துவிட்டது. காலம் காலமாக மனிதனின் கற்பனைக்கு வளம் சேர்த்த சந்திரனை இன்று மனித சக்தி தொட்டுப் பார்த்துவிட்டது. பூமி எந்தெந்த தனி மங்களால் ஆனதோ, ஏறக்குறைய அதே தனிமங்களால் ஆனவைதான் மற்ற கிரகங்கள் என்ற உண்மையும் விண்வெளி ஆய்வுகளால் தெளிவாகி விட்டது. பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதையும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் உண்மையான தன்மைகள் என்னவென்பதையும் அறிவியல் இன்று தெளிவாக விண்டுவைத்துவிட்டது. நட்சத்திரங்களில் சூரியனைத் தவிர மற்றவை பூமியிலிருந்து பல ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. அவ்வளவு தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் பூமியில் உள்ள மனிதர்களின் ‘தலைவிதி’யையோ, குணங்களையோ தீர்மானிக் கும் சக்தி கொண்டவை என நம்பு வதற்கு அறிவியல் அடிப்படை ஏதும் கிடையாது. வானத்தில் தொலைதூரத் தில் உள்ள ஒரு கிரகம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் (யீடிளவைiடிn) இருக்கும் காரணத் தால் அது பூமியில் உள்ள ஒரு தனிப் பட்ட மனிதரின் வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பதை சோதிடர்களால் அறிவியல் பூர்வமாக விளக்க முடிவ தில்லை. சோதிட சாஸ்திரத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்கு மேல் அவர்களால் விளக்கமளிக்க முடி யாது.

பேராசிரியர் கே. ராஜு