Friday, January 20, 2012

சூரிய ஆற்றல் தரப்போகும் 20,000 மெகாவாட் மின்சாரம்



சூரிய ஆற்றல் சுற்றுப்புறத்திற்கு எந்தக் கேட்டினையும் விளைவிக்காத சுத்தமான ஆற்றல்.

வடமேற்கு இந்தியாவில் 63 ஏக்கர் நிலத்தில் 36,000 சூரியத் தகடுகளை  வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் மிகப்பெரும் திட்டத்தை அசூர் பவர் என்ற நிறுவனம் நிறைவேற்றி வருகிறது. வறண்ட பகுதியில் தகடுகள் நிறுவப்பட்டுள்ளதால் ஐந்து நாட்களுக்கொரு முறை அவற்றின் மீது படியும் தூசுகளைத் துடைத்து சுத்தப்படுத்த வேண்டியுள்ளது. கடுமையான மின்பற்றாக்குறை நிலவும் இந்தியாவில் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதை நவீனப் படுத்தி, நிலக்கரியைப் பயன் படுத்தித் தயாரிக்கப்படும் மின் சாரத்தின் அளவைப் படிப்படியாகக் குறைப்பதுதான் திட்டத்தின் நோக்கம்.

2020-க்குள் 2000 மெகாவாட்

இதுவரை 140 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை மட்டுமே இந்தியா பயன்படுத்தி வருகிறது. இதைக் கொண்டு 50,000 மக்கள் தொகை உள்ள ஒரு நகரத்தின் மின்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தயாரிக்கப்படும் சூரிய ஆற்றல் மின்சாரத்தின் அளவு சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. 2020-க்குள் இந்த அளவை 20,000 மெகா வாட் ஆக உயர்த்த வேண்டும் என்ற இலக்கினை அப்போது இந்திய அரசு நிர்ணயித்தது. பல ஆய்வாளர்கள் இந்த இலக் கினை எட்டுவது சாத்தியமல்ல என்று கருதினர். ஆனால் இன்று அவர்கள் தங்கள் கருத்தினை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை தோன்றியிருக்கிறது. 2020க்கு சில ஆண்டுகள் முன்ன தாகவே 20,000 மெகாவாட் இலக்கை எட்டிவிட முடியும் என தற்போது ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக அள வில் சூரியத் தகடுகளின் விலை குறைந்ததால்தான் இது சாத்திய மாகியிருக்கிறது. சன்டெக் பவர், யிங்க்லி கிரீன் எனர்ஜி போன்ற சீன நிறுவனங்கள் சூரியத் தகடு களின் உற்பத்தியை அதிகரித்த தால், உலக விலை 30-லிருந்து 40 சதம் வரை குறைந்தது. சீனா, அமெரிக்கா, தைவான், ஐரோப் பிய நாடுகளிலிருந்து இந்திய நிறு வனங்கள் தகடுகளை வர வழைத் துக் கொள்கின்றன. அரசு மானி யம் கொடுத்து ஊக்குவிப்ப தாலும் சூரியத் தகடுகளின் விலை குறைந்திருப்பதாலும் அசூர் போன்ற பல நிறுவனங்கள் இன்று வடமேற்கு இந்தியச் சமவெளிகளில் களம் இறங்கி யுள்ளன. 2000 பேர் வசிக்கும் சிறு கிராமங்களில் கூட சூரிய சக்தித் தகடுகள் மின்னும் காட் சியைப் பார்க்க முடிகிறது.

சூரியசக்தி மின்தயாரிப்பில் ஐரோப்பிய நாடுகளோடு ஒப் பிடும்போது இந்தியா பின்தங் கியே இருக்கிறது. உதாரணமாக, 2010 இறுதியில் ஜெர்மனி 17,000 மெகாவாட் சூரியசக்தி மின் சாரத்தை உற்பத்தி செய்யும் திற னுடன் இருந்தது. ஒரு வருடத் தில் 300 நாட்களில் சூரிய ஒளி தாராளமாகக் கிடைக்கும் நம் நாட்டில் அதைவிட அதிகமாக சூரியசக்தி மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.

தயாரிப்புச் செலவு குறையும்

“இந்தியாவில் உள்ள மின் ஆலைகளில் பெரும்பாலானவை நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையங்களே. அங்கு ஒரு யூனிட்டிற்கு 4 ரூபாய் செலவில் மின்சாரம் தயாரிக் கப்படுகிறது. ஏலத்தில் அது 8-லிருந்து 10 ரூபாய் வரை எடுக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் ஒரு யூனிட் மின்சாரத்திற்குக் கொடுக்கும் விலையும் அதுதான். பெட்ரோலியப் பொருட்களைப் பயன்படுத்தும் ஜெனரேட்டர் கள் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 10 ரூபாய் செலவா கிறது. தற்போது சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் செலவு இதோடு ஒப்பிடும் நிலையில் உள்ளது. சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான தேவை அதிகரித்து வருவதால், ஒவ்வொரு மாதமும் சூரியசக்தி மின்சாரத்தின் உற்பத்திச் செலவு குறைந்து கொண்டே வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் மற்ற வகைகளில் தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு ஆகும் செலவிலேயே சூரியசக்தி மின்சாரத்தையும் தயாரிக்க முடியும். தொடக் கத்தில் நிறுவனங்களிடையே கடுமையான போட்டி இருக் கிறது. ஆனால் நாளாவட்டத் தில் கொள்ளை லாபமே நோக்க மாகக் கொண்ட நிறுவனங்கள் காணாமல் போய்விடும். இத் துறையில் உண்மையான ஈடு பாடு உள்ள நிறுவனங்கள் மட்டுமே நிலைத்து நிற்கும்” என்கிறார் அசூர் பவர் தலைமை மேலாளர் இன்டர்ப்ரீட் வாத்வா.

பேராசிரியர் கே. ராஜு
(உதவிய கட்டுரை : ‘தி இந்து’வில் விகாஸ் பஜாஜ் எழுதியது)

Wednesday, January 18, 2012

தென்னிந்திய அளவிலான அறிவியல் செய்முறை பணியரங்கு


புதுவை அறிவியல் இயக்கம் மற்றும் புதுதில்லி விஞ்ஞான் பிரச்சார் சார்பில் புதுச்சேரி வெற்றி வெங்கடேஷ்வரா ஆசிரியர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இப் பணியரங்கை, விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் நிர்வாகி டி.வி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார். புதுவை அறிவியல் இயக்கத் தலைவர் எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் எஸ்.சேகர், துணைத் தலைவர்கள் ஏ.ஹேமாவதி, ஆர்.தட்சிணாமூர்த்தி, த.பரசுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒடிஷா பாரீஸ் செüத்-11 பல்கலைக்கழக பேராசிரியர் பியர் பான்த்ஸ் பயிற்சி அளித்தார்.

இதில், புதுச்சேரி, தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 30 அறிவியல் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இப் பணியரங்கு 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

A series of Innovative Science Experiments Workshops with Prof. Pierre Fontes from France started yesterday at Pondicherry (17-19 Jan) followed by one in Bhopal (21-23 Jan) and then in Mandi (3-6 February) in collaboration with Vigyan Prasar, Department of Science & Technology, Govt. of India.
 
The Pondicherry workshop is being attended by about 25 participants from Andhrapradesh, Karnataka, Tamilnadu, Kerala and Pondicherry.  Prof.Pierre Fontes is a distinguished Nuclear Physicist and Science Communicator from the University of Paris, South 11, Orsay, France (retired) and is currently in India to conduct three workshops to train science teachers and activists on innovative, low cost experiments in science to make science teaching interesting and fun.
 
The programme was inaugurated yesterday at the Vettri Venkateswara Institute (Behind Hotel Mass) with Dr.T.Parasuraman, Vice President of PSF presiding over the function, Mr.T.P.Raghunath, Programme Coordinator welcoming the participants and explaining the background of the programme. The Inaugural talk was delivered by Dr.T.V.Venkateswaran of Vigyan Prasar, New Delhi. This was followed by an introductory speach by Dr.Fontes who started his experiments session with the participants.
 
The programme will continue for two more days. This is being followed by a Workshop at Bhopal Science Centre, Bhopal on 21 to 23 January 2012 and another one at Mandi (Himachal Pradesh). In total about 80 to 100 teachers will be trained on these experiments which require very low cost, kitchen ware materials only but with wonderful results and no less interesting than a fully equipped science lab. And thus, with schools which does not a full fledged science lab can adopt these experiments into their curriculum easily and children too can try it out at their homes.
 
Pondicherry Science Forum in collaboration with the Vigyan Prasar is also planning to bring out a manual for science experiments with which the contents of the training can be disseminated to all the schools in the country as well.



Wednesday, January 11, 2012

குழந்தைகளின் கல்விக்கு வெறும் 1 விழுக்காடுதானா?

குழந்தைகளின் அடிப்படைக் கல்வி, உலக அவையத்து இந்தியா முந்தியிருக்க மிக மிக முக்கியத் தேவை. ஆனால், இந்தியாவில் மிகவும் பிந்தியிருப்பது குழந்தைகளின் கல்விக்கு அளிக் கப்படும் முக்கியத்துவம்தான். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்காக ஒதுக்கப்படும் அரசு செலவினம் ஒருபோதும் அதிகபட்சமாக 4.3 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்ததில்லை. இது உயர்கல்வி உள்ளிட்ட அனைத்துத்துறைகளுக்குமான மொத்தத் தொகை. அடிப்படையான தொடக்கக்கல்விக் கான நிதி மிகமிகக் குறைவு.

இந்தப் பின்னணியில் குழந்தைகளின் கல் விக்காக என மத்திய-மாநில அரசுகள் ஒதுக்கு கிற நிதியிலும் கூட, நேரடியாக அவர்களுடைய கல்விக்கு என ஒதுக்கப்படுவது வெறும் 6 விழுக் காடுதான் என்று அண்மையில் மேற்கொள்ளப் பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பாடப்புத்தகங் கள், சீருடைகள், பள்ளியிலிருந்து பாதியில் விலகுகிற குழந்தைகளின் பிரச்சனைகள் இவற் றுக்காக ஒதுக்கப்படுகிற நிதி ஏற்பாடுகள் அந்த 6 விழுக்காட்டிற்குள் அடங்குகிறது. 78 விழுக் காடு வரையில் ஆசிரியர்களின் ஊதியத்திற்கும், 14 விழுக்காடு நிதி பள்ளிகளின் உள்கட்டுமான செலவுகளுக்காகவும் செல்கின்றன. கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு ஒதுக்கப்படும் நிதியோ வெறும் 1 விழுக்காடுதான்!

2009 - 2010 கல்வியாண்டுக் கட்டத்தில் பல் வேறு மாநிலங்களின் பட்ஜெட்டுகளில் தொடக் கக் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிய அந்த அறிக்கை, இந்த ஒதுக்கீடுகளின் உண்மையான இலக்காகிய குழந்தைகள் எந்த அளவுக்குப் பயனடைந்திருக்கிறார்கள் என ஆராய்கிறது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாநிலங் களில், தொடக்கக்கல்விக்கான நிதி ஒதுக்கீடு, பணக்கணக்கின்படி கணிசமாக அதிகரிக்கப் பட்டிருக்கிறது. 2007-08ம் ஆண்டில் ரூ.68,710 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2009-10ல் அது ரூ.97,255 கோடியாக உயர்த்தப்பட்டது. மாநிலத் துக்கு மாநிலம் மாறுபட்ட இதில் சில வேறுபாடு கள் இருக்கின்றன என்றாலும், ஒட்டுமொத்த மாகப் பார்க்கிறபோது குழந்தைகளின் நேரடிக் கல்விக்கு மிகச் சொற்பமான தொகைதான் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆசிரியர்களின் ஊதியம் அவர்களது நெடும் போராட்டத்தின் பலனாகக் கிடைத்திருப்பது. அதே போல் கூரையில்லாப் பள்ளிக்கூடங்கள் இன்னும் தொடர்கிற நிலையில் உள்கட்டுமானங் களுக்காக, இன்னும் பல மடங்கு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எதற்காக? குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைத்தாக வேண்டும் என்பதற் காகத்தானே? அதற்கான நேரடி நிதியை 1 விழுக்காடு அளவுக்குக் குறைத்துவிட்டு, மற்ற செலவினங்களை மட்டும் அதிகரிப்பதால் என்ன பயன்? ஆசிரியர்களுக்கான நிதி ஒதுக் கீடு குறைவாக உள்ள மாநிலங்களும் இருக்கின் றன. அதற்குக் காரணம் நிரந்தர ஆசிரியர்களுக்கு பதிலாக, கணிசமான எண்ணிக்கையில் ஒப் பந்த ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் நியமிக் கப்பட்டிருப்பதுதான்!

கட்டாய இலவசக் கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு குழந்தை களுக்கு நேரடியாக பலனளிக்கும் நிதி குறை வாக இருப்பது ஒருவகையில் அந்தச் சட்டத் தையே மீறுவதாகிவிடும். வசதியுள்ளவர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க, அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கான தரமான கல்வி உரிமையை மறுப்பதாகிவிடும். கல்வியில் ஏற்றத்தாழ்வை ஒழிக்க, போதுமான நிதி ஒதுக்கீட்டிற்கான போராட்டம் வலுப்பெற வேண்டியதன் அவசியத் தைத்தான் இந்த ஆய்வு புலப்படுத்துகிறது.