Saturday, July 30, 2011

மனித மூளைக்கு வயது 80000 ஆண்டுகள்

                  படிம ஆராய்ச்சிகளும் மரபணு செல்களில் ஏற்படும் மாற்றங்களும் மனித இனம் (ஹோமோ சேப்பியன்ஸ்) 2,00,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கின்றன. ஆனால் தற்கால மனிதனைப் போல சிந்திக்கக் கூடிய மூளை ஆரம்பக்கட்டத்திலேயே உருவாகிவிடவில்லை. தற்போது தென்னாப்பிரிக்கா என்று அறியப்படும் பூமிப்பகுதியில் 80,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களிடம் இத்தகைய மூளை வளர்ச்சி தொடங்கியதாகக் கொள்ளலாம் எனப் புதிய புதைபொருள் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

       அந்த மனிதர்கள் கற்களைக் கூர்மைப்படுத்தி அவற்றை ஈட்டிமுனைகளைப் போல் பயன்படுத்தத் தெரிந்தவர்களாக இருந்துள்ளனர். இந்த நுட்பத்தைக் கற்றுக் கொள்ள மனித இனத்திற்கு நீண்ட காலம் பிடித்திருக்கிறது. இந்த நுட்பம் கைவந்தபிறகு மனிதர்களிடையே இருந்த சமூக உணர்வு மேம்படத் தொடங்கியிருக்கிறது. நவீன மனிதர்கள் உருவாக அது அடித்தளமிட்டிருக்கிறது. 80,000 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மூளை வளர்ச்சியின் பரிணாமமே இன்றைய மனித மூளை எனக் கொள்ளலாம்.


(தகவல் : தி இந்து)

Saturday, July 23, 2011

தண்டுப்பகுதியில் வேர் முளைத்து வளரும் அதிசய மரம்

பொதுவாக தாவரங்களின் வேர்கள் தரையில்தான் இருக்கும் ஆனால் சில தாவரங்களில் வேர் தரைக்கு மேல் வளரும்.

சில தாவரங்களில் தண்டுபகுதிகளிலும் வேர் முளைக்கும்.

அவிசினியா (நெமட்டோபோர்) வகையை சேர்ந்த தாவரங்களின் வேர்கள் தரைக்கு மேலே வளரக்கூடிய வகையை சேர்ந்தது.

நீங்கள் ஆல மரத்தைப்பார்த்திருப்பீர்கள் அவைகளின் வேர்கள் தண்டுகளில் ஆரம்பித்து மண்னை நோக்கி வளர்கின்றன.
 ஆனால் நீங்கள் பார்க்கும் இந்த மரம் தூங்குமூஞ்சி மரவகையை சேர்ந்தது இதில் தண்டுப்பகுதியில் வேர் முளைத்து வளர்வது அதிசயமானது இந்த மரம் காரைக்கால் கல்வித்துறை அலுவலகத்தில் உள்ளது.

Wednesday, July 20, 2011

பாலும் மனிதர்களும்



நம்முடைய வாழ்வில் பால் மிக முக்கியமான பொருள். தேனீர் அருந்த பால் தேவை, காப்பி அருந்த பால் தேவை, எண்ணற்ற பருகும் பொருள்களுக்கு பால் தேவை. வெறும் பால் காலையில், இரவில் எல்லோரும் குடிக்கின்றனர். பால் மூலம் தயார் செய்யப்படும் பல பொருட்களை சாப்பிடுகிறோம். பாலிலிருந்து தயிர் கிடைக்கிறது, வெண்ணெய் கிடைக்கிறது, சீஸ் கிடைக்கிறது. மில்க் ஸ்வீட்ஸ் என்ற இனிப்புப் பண்டங்கள் கிடைக்கின்றன.

ஆனாலும் உலகில் எல்லோரும் பால் சாப்பிடுவதில்லை. பலருக்கு பால் ஒத்துக் கொள்வதில்லை. சில நாடுகளில் யாரும் பால் அருந்துவதில்லை. பலருக்கு பால் சாப்பிட்டால் வாந்தி, பேதி ஏற்படுகிறது. ஏன் இப்படி என்று அறிவியல் வல்லுனர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
இதில் ஒரு ஆராய்ச்சி மிகவும் சுவையானது. பாலூட்டி இனத்தில் உள்ள தாய் மிருகங்களிடம்தான் பால் வருகின்றது. மனிதர்கள், நாய், பூனை, பன்றி, எலி, ஆடு, மாடு, ஒட்டகம், குதிரை என்று பல மிருகங்களில் உடலில் இருந்து வருகின்றன. அவை அனைத்திலும் பிறந்த குழந்தைகளுக்கு உணவாக பால் அமைகிறது. வளர்ந்து விட்ட பிராணிகள் பால் அருந்துவதில்லை. வயதான மிருகங்களிடம் இருந்தும் பால் வருவதில்லை.
பாலில் லாக்டோஸ் என்ற ஒரு வகைச் சர்க்கரை உள்ளது. இந்த லாக்டோஸை, ஆற்றலாக மாற்றுவதற்கு லாட்டேஸ் என்ற ஒரு எண்ணையும் நமது உடலுக்குத் தேவை. எல்லாப் பாலூட்டி இனங்களிலும் பிறந்த குழந்தைகளுக்கு லாக்டோஸ் அதிக அளவில் இருக்கும். அதனால் தான் சிறு குழந்தைகளுக்கு தாய்ப்பால் முக்கியமான உணவாகும். இரண்டு வருடங்களுக்குப்பின் லாட்டேஸ் அளவு குறைந்து விடும்.
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் பால் அருந்துகின்றனர். ஆனால் நமது முன்னோர்களால் குழந்தைப்பருவம் தாண்டி வளர்ந்தபின் பால் அருந்தியிருக்க முடியாது. மிருகங்களிடம் இருந்துபால் கறக்க ஆரம்பித்த பிறகுதான் சிலருக்கு பால் அருந்தும் திறன் அடைந்திருக்க வேண்டும். மனித வரலாற்றில் பால் அருந்தும் திறன் பெற்றது மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. நம் முன்னோர்களுக்கு அது பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருக்க வேண்டும்.
நமது மரபணுக்களிலேயே ஒரு மாறுதல் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிலருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். பாலை செரிக்கும் வகையில் மரபணு மாற்றமடைந்ததால்தான் நம்மால் எல்லா வயதிலும் பால் அருந்த முடிகிறது.
இவைபற்றி ஆராய்ந்த அறிவியல் வல்லுனர்கள் முதலில் உலகில் எந்தெந்தப் பகுதிகளில் பால் அருந்துகிறார்கள் என்று கணக்கிட்டனர். வடக்கு மத்திய ஐரோப்பாவில் எல்லோரும் பால் அருந்துகிறார்கள். ஆனால் ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா இங்கெல்லாம் பால் பொருட்களை மக்கள் தவிர்க்கிறார்கள்.

சமீபகால ஆராய்ச்சியில் மத்திய ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரியை சுற்றியுள்ள பகுதிகளில்தான் சுமார் 7500 வருடங்களுக்கு முன்னர்தான் முதன் முதலாக பால் அருந்தும் பழக்கம் தோன்றியிருக்க வேண்டும் என்று கணக்கிட்டுள்ளார்கள்.
மற்றுமொரு ஆராய்ச்சியில் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் உபயோகித்த மண் சட்டிகளையும் பானைகளையும் இது சம்பந்தமாக ஆராய்ந்துள்ளார்கள். பால் கறப்பது இதற்கும் முன்னரே ஏற்பட்டிருக்க வேண்டும். பெண் இன மிருகங்கள் பெருமளவில் வைத்திருக்கப் பட்டிருந்தன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனாலும் பால் அருந்தும் பழக்கம் 7500 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
பால் அருந்தாவிட்டாலும் பால் ஏன் கறக்கப்பட்டது? அப்படிக் கறந்தபால் எதற்கு பயன்படுத்தப்பட்டது? பால் புளிக்க வைத்து தயிர், வெண்ணையாக மாறும் போது அவற்றில் லாக்டோஸ் பெருமளவில் எடுக்கப்பட்டு விடுகிறது. எனவே இந்த பால்பொருட்களை எல்லோரும் உண்ணலாம்.
வெப்பமான நாடுகளில் பாலை புளிக்க வைத்து தயிர் பெறுவது மிகச் சுலபம். பானையில் பாலை ஊற்றி வெயிலில் வைத்து விட்டால் போதும், தயிர் உருவாகி விடும்.
பால் கறக்கும் பழக்கம் ஏற்பட்ட காலத்திலிருந்து சுமார் 2000 ஆண்டு பால் அருந்தாதவர்கள் ஏன் பிறகு ஏன் பால் அருந்த ஆரம்பித்தார்கள்? இதற்கு சரியான விடை இன்னமும் கிடைக்கவில்லை.
ஒரு விடை. பயிர்களும், மிருகங்களும் தொடர்ந்து கிடைப்பதில்லை. பால் தொடர்ந்து கிடைக்கக் கூடிய உணவு. பால் மிகவும் மலிவானது சக்திமிகுந்தது. குடி தண்ணீரை விடவும் ஆரோக்கியமானது.

பேரா.வி.முருகன்
இளைஞர் முழக்கம்
தொடர்பு முகவரி: 57/21, அருணோதயா காம்ப்ளக்ஸ் 2வது மாடி,ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, பெரியமேடு, சென்னை - 03.தொலைபேசி: 044-25611348
ஆண்டு சந்தா: ரூ.75 

Friday, July 15, 2011

வேதியியல் இன்றி நவீன வாழ்க்கை இல்லை!


2011ஆம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டு என ஐ.நா. அறிவித் திருக்கிறது.

வேதியியல் நம் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்கச் செல் லும் வரை வேதியியல் தந்த பொருட்க ளின் துணையோடுதான் நாம் வாழ் கிறோம். நாம் பல்துலக்கப் பயன்படுத்தும் பற்பசை, குளிக்க உபயோகிக்கும் சோப், பிளாஸ்டிக் வாளி, தண்ணீர் எடுக்கப் பயன்படுத்தும் கோப்பை, தலைமுடியை வாரப் பயன்படுத்தும் சீப்பு, சாப்பிடும் தட்டு, சமையலுக்குப் பயன்படுத்தும் சமையல் எரிவாயு, சமையலில் இடம் பெறும் உப்பிலிருந்து வேறு பல பொருட்கள், எழுத உபயோகிக்கும் இங்க், நம்முடைய உடைகளை அழகழகான வண்ணங் களில் மிளிரச் செய்யும் சாயங்கள், படுக் கப் பயன்படுத்தும் நுரை மெத்தைகள், நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த கட்டுரையை அச்சடிக்கப் பயன்பட்ட இங்க் ... என நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணற்ற பொருட்கள் எல்லாம் வேதியியல் தந்த பொருட்களே.

அதுமட்டுமா? வேதியியல் இன்றி மருந்து மாத்திரைகள் கிடையாது. பாலி யஸ்டர் இழைகள், நைலான் காலுறை கள், எவர்சில்வர் பாத்திரங்கள், குளிர்பா னங்கள், தீபாவளி-திருவிழாக்களை ஜொலிக்கச் செய்யும் பட்டாசுகள், கணினி கள், சிடிக்கள், டிவிடிக்கள், ஐ-பாட்கள், வாகன எரிபொருட்கள், சமையல் எண்ணெய் வகைகள், குளிர்பதனப் பெட்டிகள், ரேடியோ, தொலைக்காட்சிப் பெட்டிகள், பாட்டரிகள்.. என அங்கிங் கின்றி எங்கும் நிறைந்திருக்கும் பொருட் கள் எல்லாம் வேதியியல் தந்த பொருட்களே.

சுருக்கமாகச் சொல்வதானால், வேதியியல் என்பது நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பொருட்களின் - காற்று, நீர், உலோகங்கள், நெகிழிகள், மருந்துகள் போன்ற எல்லாவற்றின் - தன்மை களையும் அவை எப்படி மற்ற பொருட்களு டன் சேர்ந்து வேறு பொருட்களாக மாறு கின்றன என்பதையும் பற்றியது. ஆயி ரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பா கவே வேதியியல் தோன்றிவிட்டாலும், அது அறிவியலாகத் தொடங்கவில்லை. ஆரம்பகால வேதியியலாளர்கள் மற்ற உலோகங்களை விலைமதிப்பற்ற தங்க மாக மாற்ற வேண்டும் என்ற ரசவாத முயற்சியிலேயே ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் ஆவியாக்கி குளிரச் செய்தல், வடிகட்டுதல் போன்ற நவீன விஞ்ஞானி கள் பயன்படுத்தும் சில வேதியியல் பரிசோதனை முறைகளை அவர்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள்.

மருத்துவம், வேளாண்மை, உயிரி யல், பொறியியல், புவியியல், பொருள் உற்பத்தி போன்ற மற்ற அறிவியல் துறைகளை இணைக்கும் பாலமாக வேதியியல் விளங்குகிறது. மனித முயற்சியின் காரணமாக வளர்ந்துள்ள கலை, பண்பாட்டுத் துறைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் வண்ணக் கலவைகள், சாயங்கள், துணி வகைகள், கட்டடங்கள் ஆகிய எல்லாமே வேதியியல் தந்த கொடைகளே. இதன் காரணமாக, வேதியியல் `அறிவியலின் மகுடம் (ஊநவேசயட ளுஉநைnஉந)’ எனக் கருதப்படுகிறது. வேதி யியலின் அடிப்படைக் கோட்பாடுகளைப் புரிந்து கொண்ட மாணவர், பின்னர் தான் விரும்பும் வேறு அறிவியல் துறைக்கு எளிதில் மாறிக் கொள்ள முடியும்.

இன்று நமக்குத் தெரியவந்துள்ள 118 தனிமங்கள்தான் பொருட்களின் அடிப்ப டைக் கூறுகள். இவற்றின் விதவிதமான சேர்க்கைகளே விதவிதமான பொருட் களை உருவாக்குகின்றன. வேதியியல் வளர்ச்சியில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் டால்டன். 1803ஆம் ஆண்டில் அவர் அறிவியல்பூர்வமான அணுக் கோட்பாட்டை (யவடிஅiஉ வாநடிசல) வெளியிட்டார். பொருட்கள் எப்படி அணுக்களால் ஆனவை என்பதை அவர் உதாரணங்களுடன் விளக்கினார். ரஷ்ய விஞ்ஞானி டிமித்ரி மாண்டலீவ் 1869-ல் தனிமங்களை ஒரு அட்டவணையில் வரிசைப்படுத்தியபோது 63 தனிமங்களே இருந்தன. பின்னால் கண்டுபிடிக்கப்பட இருக்கிற தனிமங்களுக்காக அவர் அட்டவணையில் காலியிடங்களை விட்டது அவரின் மேதமை. இன்று வர்த்தகம், தொழில், சுற்றுச் சூழல் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவியல் மாண வர்கள் தங்கள் துறைகளைப் புரிந்து கொள்ள வேதியியலின் அடிப்படைகளை அறிந்து கொள்வது தவிர்க்க முடியாதது.

பேராசிரியர் கே. ராஜு
(உதவிய கட்டுரை :சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழில் பிமன் பாசு எழுதிய கட்டுரை)

Wednesday, July 13, 2011

மௌன வசந்தம்



“உ லகில் தேனீக்கள் மறைந்து விட்டால், மனித குலத்தின் ஆயுட் காலம் வெறும் நான்கு ஆண்டு கள் மட்டுமே இருக்கும். தேனீக்கள் மறைந்தால், மகரந்த சேர்க்கை மறையும், செடிகொடிகள் மறை யும். மனிதனும் மறைந்து விடு வான்” ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.





மனிதர்களின் வாழ்க்கை இயற் கையுடன் பின்னிப்பிணைந்து, செடி, கொடிகள், புழு, பூச்சிகள், மிரு கங்கள், மனிதர்கள் என அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையும் சங்கிலித் தொடராக ஒன்றோ டொன்று இணைக்கப்பட்டுள்ளது. மனிதன் விவசாயத்தைக் கண்டு பிடித்ததும், பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் கொல்லக் கூடிய பூச்சிக்கொல்லிகளை கண்டு பிடித்தான். 4500 ஆண்டுகளுக்கு முன்னால், மெசபடோமியாவில், சுமேரியர்கள் ‘சல்ஃபரை’ பூச்சிக் கொல்லியாக பயன்படுத்தினார் கள் என்பதுதான் ‘முதல் பூச்சிக் கொல்லி’ என வரலாற்றில் பதி வாகியுள்ளது.

15ம் நூற்றாண்டில் ‘பாதரசம்’ (மெர்க்குரி) மனிதனுக்கு தொல்லை கொடுத்த பேன்களை ஒழிக்க பயன்படுத்தப்பட்டது. 17ம் நூற் றாண்டில், புகையிலையிலிருந்து எடுக்கப்பட்ட ‘நிக்கோட்டின் சல் பேட்’ பூச்சிக் கொல்லியாக பயன் படுத்தப்பட்டுள்ளது. (ஏன் புகை பிடிக்கக் கூடாதென்று தெரிகி றதா). 19ம் நூற்றாண்டில், சூரி யகாந்தி பூவிலிருந்தும், சில செடி களின் வேர்களிலிருந்தும் பூச்சிக் கொல்லிகள் தயாரிக்கப்பட்ட தற்கு சான்றுகள் உள்ளன. இந் தியா போன்ற உஷ்ண பிரதே சங்களில் ‘வேம்பு’ (இலை,காய், எண்ணெய்) பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டதும் பதிவாகி யுள்ளது. இவற்றைத் தவிர, வேறு சில தாவரங்கள், பூச்சிக்கொல்லி களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே ரசாயன பூச் சிக் கொல்லிகள் பயன்பாடு கூடி விட்டது. பால்முல்லர் கண்டுபி டித்த டி.டி.டி. (னுனுகூ டைக்ளோரா டைபினாயில்-ட்ரைக்ளோரா எத்தன்) பரவலாக பயன்படுத்தப் பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, பி.ஹெச்.சி (க்ஷழஊ) அல்டு ரின், டயல்டுரீன் என்ட் ரீன் ஆகிய பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப் பட்டன என்பது ஆய்வு கட்டுரைகள் மூலம் தெரிய வருகிறது.


ரேச்சல் கார்சன் (1907-1964).

உணவு சங்கிலியில் டிடிடி பூச் சிக் கொல்லி ஏற்படுத்திய பிரச்ச னைகளின் விளைவாக, ரேச்சல் கார்சன் 1962ம் ஆண்டு “மௌன வசந்தம்” என்ற நூலை எழுதி னார். இந்த நூல் டிடிடியின் மோச மான விளைவுகளை அம்பலப் படுத்தியது. ரேச்சல் கார்சன் 27, மே, 1907ல் அமெரிக்காவின் பென் சில்வேனியாவிலுள்ள இயற்கை அழகு மிகுந்த ஸ்ப்ரிங்டேலில் பிறந்தார். ஜான் ஹாப்கின்ஸ் பல் கலைக் கழகத்தில் 1932ல் விலங்கி யலில் முதுகலை பட்டம் பெற்றார். 1936 முதல் 15 ஆண்டுகள் பெட ரல் பீரோவின் எடிட்டராக பணி யாற்றினார். மிகச்சிறந்த அறிவிய லாளரான ரேச்சல், மீன்கள், வன விலங்குகள், கடல்சார் உயிரி னங்கள் பற்றி நிறைய ஆய்வு செய் துள்ளார். இவர் எழுதிய “மௌன வசந்தம்” (ளுடைநவே ளுயீசiபே), ‘அண் டர் த சீவிண்ட்’, ‘எட்ஜ் ஆஃப் தசீ’, ‘த சீ அரௌண்டு அஸ்’, ‘சென்ஸ் ஆஃப் வொண்டர்’ ஆகிய நூல்கள் மிக வும் பிரபலமானவை. எனினும் ‘மௌன வசந்தம்’ என்று 1962ல் அவர் எழுதிய நூல்தான் உலகம் முழுவதும் சுற்றுச் சூழல் இயக்கம் துவங்க காரணமாக அமைந்தது.

இயற்கையின் வரலாற்றைப் பற்றி எழுதிவந்த ரேச்சல் கார்சன், 1958ல், தனது சிநேகிதி ‘பாஸ்டீன் ஹெரால்டு’ என்ற பத்திரிகைக்கு எழுதிய கடிதத்தின் நகல் கிடைக் கப்பெற்றார். ஓலகா ஓவன்ஸ் ஹக்கின்ஸ் என்ற ரேச்சலின் சிநேகிதி, தான் வசிக்குமிடத்தில் டிடிடி பூச்சிக்கொல்லி தெளிக்கப் படுவதால், ஏராளமான பறவை கள் இறந்து போவதை எழுதி இருந்தார். கொசுக்களை கொல்ல தெளிக்கப்பட்ட டிடிடி பறவைகளை கொன்று குவித்தது. விளைவு? ரேச் சல் கார்சன் ரசாயன பூச்சிக் கொல் லிகள், குறிப்பாக டிடிடி பற்றி ஆய்வு செய்தார்.

1957ல், லாங் ஐலாண்ட் என்ற இடத்தில் டிடிடியை ஹெலிகாப்டர் மூலம் தெளித்ததன் விளைவுகள் மோசமாக இருந்ததையடுத்து அமெரிக்க வேளாண் துறை மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அது வும் ரேச்சலின் கவனத்தை ஈர்த் தது அவர் ‘நியூயார்க்கர்’ பத்திரி கையில் டிடிடி பற்றி தொடர் கட்டு ரைகள் எழுதினார். அவற்றை தொகுத்து, 27 செப்டம்பர் 1962ல், ஹ்யூட்டன் மிஃபினன் என்ற அச்சகம் ‘மௌன வசந்தம்’ என்ற நூலை வெளியிட்டது.

‘மௌன வசந்தம்’ நூலில் ரேச்சல் கார்சன் ரசாயன தொழிற் சாலைகள் தவறான தகவல்களை வெளியிடுவதையும், விமர்சனம் ஏதுமின்றி, அவற்றை அரசு அதி காரிகள் ஏற்றுக் கொள்வதையும் சாடி இருந்தார். டிடிடி சுற்றுச்சூ ழலை, குறிப்பாக, பறவைகளை கொல்வதை ஆதாரத்துடன் அவர் விளக்கியுள்ளார். “மௌன வசந் தத்திற்கு அப்பால்” என்ற நூலை ஈ.எச்.வான் எம்டனும், டேவிட் பீக் கால் என்பவரும் இணைந்து எழு தினர். அந்த நூல், 1996ல் வெளி யிடப்பட்டது.

‘மௌன வசந்தம்’ என ஏன் பெயரிட்டார்?

வசந்த காலம் என்றாலே பற வைகள் ஆனந்தமாக கூவும். செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங் கும். பிரபல ஆங்கில கவிஞர் ‘கீட்ஸ்’ எழுதிய “எந்த பறவையும் பாடவில்லை” (டுய க்ஷநடடந னுயஅந ளுயளே ஆநசஉi) என்ற கவிதைதான் இந்த தலைப்பை வைக்க தூண்டுகோ லாக அமைந்தது. பூச்சிக் கொல் லிகளால் பறவைகள், மிருகங் கள், மனிதர்கள் மறையும்போது வசந் தம் எப்படி வரும், பறவைகள் பாடாத வசந்தம் மௌன வசந்தம் தானே? என்று வினா எழுப்பி, தனது நூலுக்கான தலைப்பை நியாயப் படுத்தியுள்ளார்.

எதிரிகள் அதிகரித்தனர்

மௌன வசந்தம் நூல் வெளி யானதும் ரசாயனத் தொழிற்சாலை கள் ஒன்றிணைந்து ரேச்சலைப் பற்றி அசிங்கமான பிரச்சாரத்தில் இறங்கின. “பைத்தியம் பிடித்த பெண்” “இப்படிப்பட்ட நூலை எழுத என்ன அருகதை இருக்கிறது?” “அவர் விஞ்ஞானியே இல்லை” என்று எதிரிகள் தாக்குதலில் இறங் கினர். மான்சான்டோ, வெல்சி கோல், அமெரிக்கன் சைனா மிட் .... என்று அமெரிக்க ரசாயன உர பூச்சிக்கொல்லி தயாரிக்கும் ராட் சத நிறுவனங்கள் எதிர்தாக்குத லில் இறங்கின. அதற்கு அமெ ரிக்க அரசின் வேளாண்துறையின் ஆதரவும் இருந்தது. ஊடகங் களும் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு ஆதரவாக, ஆனால் சற்று கவனத்துடன் செயல்பட்டன. கார்ப் பரேட் நிறுவனங்கள் சார்பில், ராபர்ட் வொயிட் ஸ்டீவன் என்ப வர், கார்சன் சொல்வதைக் கேட் டால், “நாம் இருண்ட காலத்திற்கு செல்ல வேண்டியதுதான். பூச்சிக ளும் புழுக்களும் நோய்களும் தாக்கி, இந்த பூமி புழு, பூச்சிக ளின் இருப்பிடமாக மாறிவிடும்” என்று எச்சரித்தார்.

பிரிட்டிஷ் நாட்டின் அரசியல் வாதி, டிக்டெவர்ன் “கார்சன் தனது நூலில், டிடிடி கொசுக்களை அழித்து, மலேரியா நோயை ஒழிக்க உதவியுள்ளது பற்றி எது வும் கூறவில்லை. 20ம் நூற்றாண் டில் ஏற்பட்டுள்ள ஆயிரக்கணக் கான சாவுகளுக்கு கார்சன்தான் பொறுப்பேற்க வேண்டும் “(2005ல் எழுதியது).

“மனித நிகழ்வுகள்” என்ற பத் திரிகை 19 மற்றும் 20ம் நூற்றாண் டில் வெளியிடப்பட்ட 10 மிக மோச மான நூல்களில் மௌன வசந்தம் ஒன்று என பட்டியலிட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந் தும், பெரு முதலாளிகளிடமிருந் தும் வேறு எதை எதிர்பார்ப்பது?

அமெரிக்காவில் 1962ல் இந்த நூல் சர்ச்சையை ஏற்படுத்திய தைத் தொடர்ந்து, அன்றைய அதி பர் ஜான்.எப். கென்னடி, இதுதொ டர்பான ஆய்வுக்கு உத்தரவிட் டார். நீண்ட ஆய்வுக்குப்பின், நூலில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் உண்மை எனத் தெரிய வந்தது. அதன் பின்னர் ரசாயன பூச்சிக்கொல்லி/உரம் ஆகியவற்றின் பயன்பாடு பற் றிய ஒழுங்குபடுத்தும் விதிமுறை கள் உருவாக்கப்பட்டன. இது இந் நூலுக்கு கிடைத்த வெற்றியாகும்.

கொலராடோ சட்ட பல்கலைக் கழக பேராசிரியர் டேவிட் கெட் ஜஸ் “இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத் திய நூல் மௌன வசந்தம்” என்று குறிப்பிட்டுள்ளார். பருவநிலை மாற் றம் தொடர்பான கமிட்டியின் தலை வர் அல்கோரே, “சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகளை பொது விவாதத்திற்கு கொண்டு வருவதற்கும், பூவுலகை பாதுகாக் கும் நடவடிக்கைகளை உருவாக்கு வதற்கும் மௌன வசந்தம் உதவியுள் ளது. 20ம் நூற்றாண்டில் தடம் பதித்த நூல் மௌன வசந்தம்” என பாராட்டியுள்ளார்.

பல்வேறு அறிவியல் நூல் களை படைத்த, இயற்கையை நேசித்த ரேச்சல் கார்சன் 4.4. 1964ல் புற்று நோய் தாக்கி மரண மடைந்தார். அமெரிக்காவில், செல் வாக்கு மிகுந்த ரசாயன உற்பத் தியாளர்களின் கூட்டமைப்பை தீரத்துடன் எதிர்கொண்டு, மனி தன் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து, பூவுலகை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகின்ற உலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கத்திற்கு விதை ஊன்றிய ரேச்சல் கார்சன் இயற்கையை நேசிக்க கற்றுக் கொடுத்துள்ளார்.

Monday, July 4, 2011

தாகம் - ஒரு அறிவியல் பார்வை


மனிதர்களிலும், விலங்குகளிலும் காணப்படும் இயல்பூக்கம் தாகம் எனப்படும். தாகத்தின் விளைவாக நாம் திரவங்களைத் தேடுகிறோம். உடலில் உள்ள திரவத்தின் சமநிலையை பராமரிப்பதற்கான கருவியாக தாக உணர்வு செயல்படுகிறது.

thirsty உடலில் திரவப்பொருட்கள் குறையும்போதோ, உப்பின் அடர்த்தி அதிகமாகும்போதோ தாக உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளின்போது மூளை வேகமாக செயல்பட்டு தாக உணர்வை ஏற்படுத்துகிறது.

உடலில் தொடர்ந்து நீரிழப்பு இருக்குமானால் அது பலவகையான சிக்கல்களின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் நரம்பியல் கோளாறுகளின் விளைவாக மூளையின் செயல்திறன் குறையும்; சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். அளவுக்கதிகமான தாக உணர்வை polydipsia என்கிறோம். அதிகப்படியாக சிறுநீர் போதல் polyuria எனப்படும். இது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

தாக உணர்வு மையநரம்பு மண்டலத்தினால் உணரப்படுகிறது. extracellular thirst என்பது உடலில் நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும். intracellular thirst என்பது உடலில் உப்பின் அடர்த்தி அதிகரிப்பதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும்.

இரண்டு வகையான தாக உணர்வுகளுமே மூளையின் மைய நரம்புமண்டலத்தால்தான் உணரப்படுகின்றன.