Thursday, April 19, 2012

சிறுநீரக மாற்று சிகிச்சை


சிறுநீரகங்கள் மனித உடலில் மிக முக்கியமான இரு உறுப்புகள். அவரைக்காய் வடிவத்தில் உள்ள இவை விலா எலுப்புக்கூட்டிற்குக் கீழ் முதுகெலும்புக்கு இருபக்கத் திலும் அமைந்திருக்கின்றன. இரத் தத்திலிருந்து கழிவுப் பொருள் களையும் நீரையும் அகற்றி சிறுநீர் வழியாக வெளியேற்றும் வேலை யை அவை செய்கின்றன. ஒரு வீட் டைக் கூட்டிப் பெருக்கிக் குப்பை களை அகற்றாவிட்டால் என்ன ஆகும்? சிறுநீரகம் இல்லை யெனில் உடலின் நிலையும் அது தான். ஒவ்வொரு நாளும் சுமார் 50 காலன் ரத்தத்தைச் சுத்தி கரித்து கழிவுகளை அவை பிரித் தெடுக்கின்றன. கழிவுகள் சிறுநீர்க் குழாய்கள் வழியாக சிறுநீர்ப்பை யை அடைகின்றன.

பின்னர் சிறு நீராக அவை வெளியேறுகின்றன. நீரிழிவு நோய், அதிக ரத்த அழுத்தம், புகை பிடித்தல், குடிப் பழக்கம் போன்ற காரணங்களால் சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாக நேரும். உயிர் வாழ்வதற்கு ஒரு சிறு நீரகமே போதுமானது. எனவே சிறு நீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியமான ஒருவரிடமிருந்து ஒரு சிறுநீரகத்தை எடுத்துப் பொருத்துவது சிறுநீரக மாற்று சிகிச்சை என அழைக்கப்படுகிறது.சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சிறுநீரக மாற்று சிகிச்சைக்குப் பெயர் பெற்றது. இந்த ஆண்டு மார்ச் 20 அன்று அங்கு 1000-வது தடவையாக இச் சிகிச்சை நடைபெற்றது. இந்தியா வில் இந்த சாதனையைச் செய்த முதல் அரசு மருத்துவமனை இந்த மருத்துவமனையே என்கிறார் மருத் துவமனையின் டீன் வி. கனகசபை.25 ஆண்டுகளுக்கு முன் 1987 ஜூலை 10 அன்று இந்த மருத்துவமனையின் முதல் சிறு நீரக மாற்று சிகிச்சையைச் செய் தவர் டாக்டர் எம்.ஏ. முத்துசேதுபதி. “25 ஆண்டுகளில் 1000 சிறுநீரக மாற்று சிகிச்சை நடந்திருப்பது ஒரு சாதனைதான். 1982-ல் ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் முதன்முதலாக இந்த சிகிச்சையை நாங்கள் செய்தோம். பிறகு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்ற லாகி வந்ததும் அந்த சிகிச்சையைத் தொடர்ந்தோம். 25 ஆண்டுகளுக்கு முன் மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொண்டவர்களில் சுமார் 80 சதம் பேருக்கு சிகிச்சைக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழக் கூடிய வாய்ப்பு இருந்தது. படிப்படி யாக இதில் முன்னேற்றம் ஏற்பட் டது. தமிழகத்தில் சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடை பெற்று வருவதற்குக் காரணம், சிகிச்சை செய்துகொண்டவர் களுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்புத் திறன் ஒடுக்க மருந்துகள் (iஅஅரnடிளரயீயீசநளளiடிn னசரபள) இலவசமாக அளிக்கப்பட்டதுதான்” என்கிறார் டாக்டர் முத்துசேதுபதி. “இன்று இந்த மருந்துகளின் விலை 10000 ரூபாயிலிருந்து 12000 ரூபாய் வரை ஆகிறது.

மாநில அரசு நோய் எதிர்ப்புத் திறன் சிகிச்சைக்கு 2 கோடி ரூபாயை ஒதுக்கியிருக் கிறது” என்கிறார் டாக்டர் கனக சபை. மரணமடைந்தவர்களின் சிறு நீரகத்தை எடுத்து நோயாளிகளுக் குப் பொருத்தும் சிகிச்சை (உயனயஎநச வசயளேயீடயவே) 1996-ல் முதன் முத லாக இங்கு நடைபெற்றாலும் 2008-ஆம் ஆண்டிலிருந்தே பரவ லாக நடைபெறத் தொடங்கியிருக்கிறது.உலக சிறுநீரக நாளாக மார்ச் 8 அனுசரிக்கப்படுகிறது. அன்று சென்னையில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் களும், சிறுநீரக தானம் செய்தவர் களும் மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொள்ள இருக்கும் நோயாளி களைச் சந்தித்து உரையாடினர். 17 ஆண்டுகளுக்கு முன் மாற்று சிறு நீரகம் பொருத்திக் கொண்ட ஒருவர் தன்னுடைய அனுபவங்களை மற்ற வர்களுடன் பகிர்ந்து கொண்டார். சிகிச்சை மேற்கொள்ள இருக்கும் நோயாளிகளுக்கு இந்த சந்திப்பு உற்சாகத்தையும் நம்பிக்கையை யும் அளித்தது. “சிகிச்சைக்குப் பிறகு 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளை நான் அறிவேன். நோய் எதிர்ப்புத் திறன் ஒடுக்க மருந்துகளின் விளைவாக ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பதுதான் சவாலாக இருக் கிறது” என்கிறார் டாக்டர் முத்து சேதுபதி.சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டவர்களுக்கு மாற்று சிறுநீர கமே புனர்வாழ்வு அளிக்கிறது. எனவே, இத்துறையில் உள்ள சவால்களைச் சந்தித்து நூற்றுக்கு நூறு வெற்றி அடைய எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துவோம்.

பேராசிரியர் கே. ராஜு
(உதவிய கட்டுரை : தி இந்துவில் திருமிகு ஆர். சுஜாதா எழுதியது)