Sunday, February 19, 2012

புதுவை அறிவியல் இயக்கத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி


தானே புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு புதுவை அறிவியல் இயக்கத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரியில் கடந்த டிசம்பர் 30ஆம்தேதி தானே புயலால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.அதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் அடங்கிய இடுபொருட்கள், மாணவர்களுக்கு புத்தகபைகள், நோட்டு புத்தகங்கள், பெண்கள் வீட்டு தோட்டத்தில் காய்கறிகள் பயிரிடுவதற்கு விதைகள் மற்றும் இடுபொருட்கள் ஆகியவை  வழங்கும் நிகழ்ச்சி ரெட்டியார்பாளையம், பாகூர், உச்சிமேடு கிராமம் ஆகிய பகுதியில் நடைபெற்றது.

 இந்நிகழ்சியில் அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் S.சேகர், துனைதலைவர் முனைவர் T. பரசுராமன் நிர்வாகிகள் R. தட்சணாமூர்த்தி, A. ஹேமாவதி, T.P.ரகுநாத், M. சுதர்சனன், P. ரவிச்சந்திரன், R. ரமேஷ், K. விஜயமூர்த்தி, சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் செயலாளர் டி.சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

இதேப்போல் கடந்த ஜனவரி மாதத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, சமையல்என்ணெய், போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

No comments: