Friday, December 23, 2011

விண்வெளிக்கு வீரர்களை கொண்டு செல்லலும் புதிய விண்கலம் ஸ்பேஸ்எக்ஸ்


விண்வெளி அமைப்பான நாஸா தனது ஷட்டில் ரக விண்கலங்கள் உபயோகிப்பதை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில், ஸ்பேஸ்எக்ஸ்ரக விண்கலங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரஉள்ளது.

ஏறக்குறைய 30 ஆண்டுகள் 135 முறை ஏவப்பட்ட ஸ்பெஸ் ஷட்டில்ரக விண்கலங்கள் ஏராளமான விண்வெளி வீரர்களை விண்ணுக்கு கொண்டு சென்றது. தற்போது இதற்கு பதில் மிக நவீனரக ஷட்டில்களை நாஸா உருவாக்கி வருகிறது. அதுவரை வீரர்களை விண்ணுக்கு அழைத்துச் செல்லவும் பூமிக்கு திரும்பச் செலுத்தவும் ரஷ்யாவின் சோயூஸ் கேப்சூல்களையே அமெரிக்கா சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் அமெரிக்காவில் பல விண்துறை நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள டிராகன் ரக கேப்சூலுக்கு நாஸா அனுமதி தந்துள்ளது. இந்த கேப்சூல் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். இதில் பயணிக்கும் விஞ்ஞானிகள் வானில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்று, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு விட்டு, இந்த கேப்சூலிலேயே பூமிக்குத் திரும்புவர்.ஷட்டில் ரக விண்கலம் விமானத்தைப் போல பூமியில் தரையிறங்கும்.ஆனால் இந்த கேப்சூல் பாராசூட் மூலம் பூமியில் தரையிறங்கும்.
ரஷ்யா தான் ஆரம்பம் முதலே கேப்சூல்களை பயன்படுத்தி வந்தது. தற்போது அமெரிக்கா கேப்சூலை பயன்படுத்தவுள்ளது. அமெரிக்கா 2012 பிப்ரவரி மாதம் 7ம் தேதி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் என்றும் இதில் வீரர்கள் செல்ல மாட்டார்கள்என்பதும், சரக்குகள் ஏற்றிச்செல்லும் இந்த கேப்சூல், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அதை கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்குள்ள விஞ்ஞானிகள் சரக்குகளை இறக்கிய பின், இந்த கேப்சூல் பூமிக்கு திரும்பும். பசிபிக் கடலில் பாராசூட் முலம் இந்தக் கலம் தரையிறங்கும்இந்த விண்கலத்தை உருவாக்கியுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் பே பால் நிறுவனரான எலோன் முஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: