Friday, October 14, 2011

‘நோயர்’ விருப்பம்


வெகுகாலத்துக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று. ஒரு வயதான அம்மையார் மருத்துவரிடம் மூட்டு வலி என்று சென்றார். மருத்துவர் ஸ்டெதெஸ்கோப்பை எடுத்தார்.

அப்போதுஅந்த நோயாளி அதிச யித்தார். “நானும் எத்தனையோ டாக் டர்களிடம் காட்டிவிட்டேன். யாருமே இந்த குழாயை மூட்டில் வைத்துப் பார்க்கவே இல்லையே ராசா”

உஷாரான அந்த மருத்துவர் ஸ்டெதெஸ்கோப்பை மூட்டில் வைத்துப் பார்த்தார்.

பாட்டிக்கு பரம திருப்தி. அதில் வேடிக்கை என்னவெனில், மூட்டில் வைத்து விட்டு, பழக்கதோஷத்தில் டாக்டர் “மூச்சை நல்லா இழுத்து விடுங்க” என்றதுதான்!

ஒரு துணி எடுக்கச் செல்லும் போது நம் மனதில் ஒரு எதிர்பார்ப்பு இருப்பதுபோல், மருத்துவரிடம் செல்லும்போது நோயுற்றவர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இன்ன வியாதிதான் நமக்கு. அதற்கு இது தான் காரணம். இதுதான் வைத்தி யம் என்று ஒரு எதிர்பார்ப்போடு தான் வருவார்கள். திறமையைவிட இந்த ‘நோயர்’ விருப்பத்தைப் பூர்த்தி செய்வதே ஒரு மருத்து வரைப் புகழ்பெற்றவராக்குகிறது.

எல்லா நோய்களுக்கும் ஊசி போட்டால்தான் சரியாகும் என்பது பெரும்பாலான நோயர் விருப்பமாக உள்ளது. அதிலும் சிலர் வலது கை வலி என்று போனேன், இடதுகை யில் ஊசி போட்டுவிட்டார்கள் என்று நுகர்வோர் நீதிமன்றம் வரை போவதுண்டு.

நெல்லை டவுனில் ஒரு புகழ் பெற்ற மருத்துவர் இருந்தார். அவரது கிளினிக் திஹார் ஜெயில் போல் நிரம்பி வழியும். காரணம் அவரது தனித்தன்மையே. நாம் எந்தப்பகுதியில் வலி என் கிறாமோ அந்தப்பகுதியிலேயே ஊசி போடுவார். சற்றும் மிகைப்படுத்த லற்ற உண்மை இது. இது தெரியா மல் வரிசையில் காத்திருந்த ஒருவர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட் டதும், தலை தெறிக்க வெளியே ஓடி விட்டார். வேறு ஒன்றுமில்லை; அவர் மூல வியாதிக்காகச் சிகிச்சை பெற வந்திருந்தார்.

இப்பொழுதெல்லாம் குழந்தை பெறுவது கூட இயற்கையாக அன்றி நாள் நட்சத்திரம் பார்த்துப் பெரியவர் களின் விருப்பப்படிதான் நடைபெறு கிறது. “ரோகிணி நட்சத்திரம் வேண் டாம். மாமாவுக்கு ஆகாது. அதனால் இன்னும் இரண்டு நாள் கழித்து சிசேரியன் வைத்துக் கொள்ளலாமா டாக்டர்” என்று கேட்பது சாதாரண மாகிவிட்டது. எதிர்காலத்தில் மகப் பேறு மருத்துவமனைகளில் ட்யூட்டி டாக்டர் போல் ட்யூட்டி ஜோதிடர் களும் இருக்கலாம்.
நோயுற்றவரின் எதிர்பார்ப்பும், உடன் இருப்பவரின் விருப்பமும் வேறு வேறாக இருக்கும். மேலை நாட்டில் பத்து வருடங்களாக மூக் கடைப்பால் அவதிப்பட்டிருந்த ஒரு பெண், மூக்கடைப்பு சரியானதும், கணவர் மீது துர்நாற்றம் அடிக்கிறது என்று விவாகரத்து செய்துவிட்டார்.

எதற்காக சிகிச்சைக்கு வருகி றார் என்பதைத்தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். குடிப்பழக்கத் தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் என் னிடம் வந்தார். “குடிச்சு குடிச்சுக் கையெல்லாம் ரொம்ப நடுங்குது டாக் டர். எப்படியாவது நீங்கதான் இதை நிறுத்தணும்” என்றார்.

‘கவலைப்படாதீங்க! உங்க குடிப் பழக்கத்தை நிறுத்திடலாம்’ என் றேன். திடுக்கிட்ட அவர், “அதெல் லாம் வேண்டாம் டாக்டர். இந்த கை நடுக்கத்தை மட்டும்நிறுத்துங்க! சரக்கெல்லாம் கொட்டி நிறைய வீணாகுது” என்றார்.

ஒரே வியாதியால் இருவர் பாதிக் கப்படலாம். ஆனால் இருவரும் ஒன் றல்ல. நேயர் விருப்பம்போல் நோயர் விருப்பமும் தனித்தன்மையுடையதே.

டாக்டர் ஜி.ராமானுஜம்
நன்றி: புதிய ஆசிரியன் 

No comments: