Saturday, November 12, 2011

குழந்தைகள் அறிவியல் திருவிழா



காரைக்காலில் 5 நாள் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் திருவிழா நடைபெற்றது காரைக்காலில் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை மற்றும் புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் 5 நாட்கள் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் திருவிழா கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் துவங்கியது.

அறிவியல், மொழி, கலை, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளரும் தலைமுறையினர் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு துவங்கப்பட்ட இந்த குழந்தைகள் அறிவியல் திருவிழா கடந்த ஆண்டு ஏனாம் பகுதியில் நடைபெற்றது. 2வது ஆண்டாக காரைக்காலில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் புதுச்சேரி, மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த அறிவியல் திறன் பெற்ற   50 மாணவர்களும், காரைக்காலில் அறிவியலில் சிறந்து விளங்கும் 50 மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மூன்று பிராந்தியங்களில் உள்ள கலாசாரம், பழக்கவழக்கம், அறிவியல் முறைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் 6 பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சிகள் நடந்தன. அறிவியலின் செயல்பாடு, எண்கள், கற்பனை வளமும் காகித கலையும் அதிசயங்களை விவரித்தல், இயற்கை படிப்பு, அறிவியல் பொம்மை தயாரித்தால் ஆகிய தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடந்தன.
தினந்தோறும் மாலை நேரத்தில் 3 பிராந்திய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

1 comment:

உமா மோகன் said...

pallip paruvaththai silarukku vaazhkkai muzhuthaiyum arththamullathaakkum nigazhvugal vaazhga valarga!